என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வயிற்றுவலியோடு வந்தப் பெண்ணை ஆபாசப் படம் எடுத்த டாக்டர் கைது
Byமாலை மலர்4 Nov 2016 9:56 AM GMT (Updated: 4 Nov 2016 9:56 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வயிற்றுவலிக்காக சிகிச்சைபெற வந்தப் பெண்ணை செல்போன் மூலம் ஆபாசப் படம் எடுத்த டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள பஜார்தியா பகுதியை சேர்ந்த ஒருபெண் சமீபத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக இதேபகுதியை சேர்ந்த ஒரு டாக்டரிடம் சென்றார்.
அந்தப் பெண்ணை பரிசோதித்த டாக்டர், அவரிடம் ஒருவகையான களிம்பை கொடுத்து, ஒதுக்குப்புறமாக உள்ள பக்கத்து அறைக்கு சென்று வயிற்றில் களிம்பை தடவுமாறு கூறினார்.
பக்கத்து அறைக்கு சென்று ஆடைகளை தளர்த்திவிட்டு, அடிவயிற்றுப் பகுதியில் களிம்பை தடவும்போது அந்த அறையின் கூரைபகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் கேமராவை கண்ட அந்தப் பெண் திடுக்கிட்டார்.
அந்த செல்போனுடன் நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர், இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நோயாளியின் அந்தரங்கத்தை ஆபாசமான முறையில் படம்பிடித்த குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள பஜார்தியா பகுதியை சேர்ந்த ஒருபெண் சமீபத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக இதேபகுதியை சேர்ந்த ஒரு டாக்டரிடம் சென்றார்.
அந்தப் பெண்ணை பரிசோதித்த டாக்டர், அவரிடம் ஒருவகையான களிம்பை கொடுத்து, ஒதுக்குப்புறமாக உள்ள பக்கத்து அறைக்கு சென்று வயிற்றில் களிம்பை தடவுமாறு கூறினார்.
பக்கத்து அறைக்கு சென்று ஆடைகளை தளர்த்திவிட்டு, அடிவயிற்றுப் பகுதியில் களிம்பை தடவும்போது அந்த அறையின் கூரைபகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் கேமராவை கண்ட அந்தப் பெண் திடுக்கிட்டார்.
அந்த செல்போனுடன் நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர், இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நோயாளியின் அந்தரங்கத்தை ஆபாசமான முறையில் படம்பிடித்த குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X