search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு படை வீரர் நிதின் சுபாஷ் உயிரிழப்பு
    X

    எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு படை வீரர் நிதின் சுபாஷ் உயிரிழப்பு

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மச்சில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்பு வீரர் நிதின் சுபாஷ் உயிரிழந்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் நேற்று விடிய,விடிய துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் ஈடுபட்டனர். காஷ்மீரின் கத்துவா, ரஜோரி மற்றும் ஜம்மு மாவட்டத்தின் எல்லையோரமுள்ள இந்திய நிலைகளின்மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.

    இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

    இதனிடையே காஷ்மீரின் மச்சில் பகுதியில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்த எல்லைப் பாதுகாப்பு வீரர் நிதின் சுபாஷ் உயிரிழந்துள்ளார்.

    முன்னதாக குப்வாரா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சந்தீப் சிங் ராவத்துக்கு டெராடூன் நகரின் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    Next Story
    ×