search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி மேபா, சைலஷா
    X
    சிறுமி மேபா, சைலஷா

    4 வயது சிறுமியை கொன்று ஆற்றில் வீசிய பெண்: உறவினர்கள் பேசாததால் ஆத்திரம்

    திருச்சூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை கொன்று ஆற்றில் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒல்லூரை சேர்ந்தவர் சைலஷா (வயது 46). இவர் அதே பகுதியில் தனியே வசித்து வருகிறார்.

    சைலஷாவின் நடத்தை சரியில்லாததால் பக்கத்தில் வசிக்கும் அவரது உறவினர்கள் அவரின் உறவை துண்டித்தனர். இதனால் உறவினர்கள் மீது சைலஷாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவர்களை பழிவாங்க தக்க சமயத்துக்காக காத்திருந்தார்.

    இவரது உறவினர் ரஞ்சித்குமார். அவருக்கு மேபா (4) என்ற மகள் இருந்தாள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிய சிறுமி திடீரென காணாமல் போய் விட்டாள். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    நேற்று மாலை சிறுமி மேபா அங்குள்ள ஆற்றில் பிணமாக மிதந்தாள். இது குறித்து பெற்றோருக்கு தெரியவந்ததும் ஓடிச்சென்று பார்த்து கதறி அழுதனர். விபரம் அறிந்த சாலக்குடி டி.எஸ்.பி வாஜித் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி வாஜித் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் சம்பவத்தன்று சிறுமி மேபாவை அவரது உறவினர் சைலஷாவுடன் ஆற்றுப்பகுதியில் பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்.

    அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சிறுமியை கொன்றதை ஒப்புக்கொண்டார். தன்னிடம் உறவினர்கள் யாரும் பேசாமால் ஒதுக்கி வைத்ததால் அவர்களை பழிவாங்க முடிவு செய்தேன். அதன்படி நேற்று முன்தினம் வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுமியை ஆற்றுப்பகுதிக்கு தூக்கிச்சென்றேன்.

    அங்கு சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பிணத்தை ஆற்றில் வீசினேன் என்றார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நாளை திருச்சூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.
    Next Story
    ×