என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது கடத்தியதாக முன்னாள் முதல் மந்திரி பேரன் கைது
Byமாலை மலர்16 Oct 2016 4:49 AM GMT (Updated: 16 Oct 2016 4:49 AM GMT)
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் காருக்குள் மறைத்துவைத்து மது கடத்தியதாக முன்னாள் முதல் மந்திரி ஜித்தன்ராம் மாஞ்சியின் பேரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. நாட்டின் எந்தப்பகுதியிலும் சொட்டு சாராயம்கூட கிடைக்காமல் மதுவறண்ட மாநிலமாக பீகார் மாறிவிட்டதால் அம்மாநில குடிமகன்கள் போதையை தேடி பிறநாட்டு எல்லைக்குள்ளும் ஊடுருவ துணிந்து விட்டனர்.
இந்நிலையில், இங்குள்ள கயா மாவட்டத்தில் கலால்துறை மற்றும் உள்ளூர் போலீசார் நேற்று மாலை தீவிரமாக வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர்,
அப்போது கத்வாரா என்ற கிராமத்தின் அருகே வந்த ஒருகாரை வழிமறித்து சோதனையிட்டனர்.
காருக்குள் 12 பீர் பாட்டில்களும் ஒரு விஸ்கி பாட்டிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காரில் வந்த விக்கி குமார் மான்ஜி(30) மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்த போலீசார் அவர்கள்மீது மதுகடத்தல் வழக்குப்பதிவு செய்து கயா மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட விக்கி குமார் மான்ஜி, பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி ஜித்தன்ராம் மான்ஜியின் மகள் வயிற்றுப் பேரன் என்பதும், தனது மனைவியை கொன்றதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. நாட்டின் எந்தப்பகுதியிலும் சொட்டு சாராயம்கூட கிடைக்காமல் மதுவறண்ட மாநிலமாக பீகார் மாறிவிட்டதால் அம்மாநில குடிமகன்கள் போதையை தேடி பிறநாட்டு எல்லைக்குள்ளும் ஊடுருவ துணிந்து விட்டனர்.
இந்நிலையில், இங்குள்ள கயா மாவட்டத்தில் கலால்துறை மற்றும் உள்ளூர் போலீசார் நேற்று மாலை தீவிரமாக வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர்,
அப்போது கத்வாரா என்ற கிராமத்தின் அருகே வந்த ஒருகாரை வழிமறித்து சோதனையிட்டனர்.
காருக்குள் 12 பீர் பாட்டில்களும் ஒரு விஸ்கி பாட்டிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காரில் வந்த விக்கி குமார் மான்ஜி(30) மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்த போலீசார் அவர்கள்மீது மதுகடத்தல் வழக்குப்பதிவு செய்து கயா மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட விக்கி குமார் மான்ஜி, பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி ஜித்தன்ராம் மான்ஜியின் மகள் வயிற்றுப் பேரன் என்பதும், தனது மனைவியை கொன்றதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X