என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உரி தாக்குதல்: இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்த தேசிய புலனாய்வு நிறுவனம்
Byமாலை மலர்27 Sep 2016 2:43 PM GMT (Updated: 27 Sep 2016 2:44 PM GMT)
உரி தாக்குதலின்போது இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இருவரை தேசிய புலனாய்வு நிறுவனம் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
புது டெல்லி:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் மீது கடந்த 18-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு இந்த தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
உரி தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இருவரையும் தேசிய புலனாய்வு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணையைத் துவக்கியுள்ளது. உரி தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவியதாக கைதான இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விரைவில் இருவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேசிய புலனாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் மீது கடந்த 18-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு இந்த தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
உரி தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இருவரையும் தேசிய புலனாய்வு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணையைத் துவக்கியுள்ளது. உரி தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவியதாக கைதான இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விரைவில் இருவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேசிய புலனாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X