search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி நட்டா மீது மை வீசிய எய்ம்ஸ் மாணவர்கள்
    X

    மத்திய மந்திரி நட்டா மீது மை வீசிய எய்ம்ஸ் மாணவர்கள்

    மத்திய பிரதேசத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட சென்ற மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மீது மருத்துவ கல்லூரி மாணவர்கள் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா இன்று  பார்வையிட சென்றார். அப்போது திடீரென மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவர் மீது மை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது கல்லூரியில் அடிப்படை வசதி ஏதும் இல்லை என்று கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    மாணவர்கள் தங்கள் குறைகளை கூறியபோது அதைக் கேட்பதற்காக மத்திய மந்திரி நட்டா நிற்கவில்லை என்பதால் மை வீசியதாக கூறப்படுகிறது.

    மருத்துவமனையை பார்வையிட சென்ற மத்திய மந்திரி மீது கல்லூரி மாணவர்கள் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×