என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை பலியிட தடைகோரும் வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை பலியிட தடைகோரும் வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609170800057307_SC-refuses-to-entertain-plea-questioning-animal-sacrifice-on_SECVPF.gif)
X
பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை பலியிட தடைகோரும் வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை
By
மாலை மலர்17 Sep 2016 2:30 AM GMT (Updated: 17 Sep 2016 2:30 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை பலியிட தடைகோரும் வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
புதுடெல்லி:
பக்ரீத் பண்டிகையின் போது குர்பானிக்காக ஒட்டகங்களை பலியிடுவது வழக்கம். ஆனால் இவ்வாறு ஒட்டகங்களை பலியிடுவதை தடை செய்ய உத்தரவிடக்கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
மதரீதியான காரணங்களுக்காக மிருகங்களை பலியிடுவதற்கு விலக்கு அளிக்கும் வகையில் விலங்குகள் வதை தடை சட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ள 28-வது பிரிவை நீக்கவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரணை தொடங்கியதுமே இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
அப்போது பதிலளித்த மனுதாரர் தரப்பு வக்கீல், தாங்கள் இந்த மனுவை வாபஸ் பெறுவதாகவும், ஆனால் இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டை அணுகுவதற்கு அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டெல்லி ஐகோர்ட்டை அணுக அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.
பக்ரீத் பண்டிகையின் போது குர்பானிக்காக ஒட்டகங்களை பலியிடுவது வழக்கம். ஆனால் இவ்வாறு ஒட்டகங்களை பலியிடுவதை தடை செய்ய உத்தரவிடக்கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
மதரீதியான காரணங்களுக்காக மிருகங்களை பலியிடுவதற்கு விலக்கு அளிக்கும் வகையில் விலங்குகள் வதை தடை சட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ள 28-வது பிரிவை நீக்கவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரணை தொடங்கியதுமே இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
அப்போது பதிலளித்த மனுதாரர் தரப்பு வக்கீல், தாங்கள் இந்த மனுவை வாபஸ் பெறுவதாகவும், ஆனால் இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டை அணுகுவதற்கு அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டெல்லி ஐகோர்ட்டை அணுக அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)