என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய மந்திரி வி.கே.சிங்கின் மனைவியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்
Byமாலை மலர்18 Aug 2016 12:56 AM GMT (Updated: 18 Aug 2016 12:56 AM GMT)
மத்திய மந்திரி வி.கே.சிங்கின் மனைவியிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய பிரதீப் சவுகான் என்பவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங்கின் மனைவி பாரதி சிங். இவரது உறவினரின் நண்பரான பிரதீப் சவுகான் என்பவர் பாரதி சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பாரதி சிங் மற்றும் வி.கே.சிங் தொடர்பான சில ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் கூறினார்.
அந்த படங்கள் வெளியானால் வி.கே.சிங்கின் பதவிக்கு ஆபத்து என்று மிரட்டிய பிரதீப் சவுகான், அவற்றை வெளியிடாமல் இருப்பதற்கு ரூ.2 கோடி பணம் வேண்டும் எனவும் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து பாரதி சிங் டெல்லி துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரதீப் சவுகானை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதற்காக சிறப்புப்படை ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங்கின் மனைவி பாரதி சிங். இவரது உறவினரின் நண்பரான பிரதீப் சவுகான் என்பவர் பாரதி சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பாரதி சிங் மற்றும் வி.கே.சிங் தொடர்பான சில ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் கூறினார்.
அந்த படங்கள் வெளியானால் வி.கே.சிங்கின் பதவிக்கு ஆபத்து என்று மிரட்டிய பிரதீப் சவுகான், அவற்றை வெளியிடாமல் இருப்பதற்கு ரூ.2 கோடி பணம் வேண்டும் எனவும் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து பாரதி சிங் டெல்லி துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரதீப் சவுகானை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதற்காக சிறப்புப்படை ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X