என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐதராபாத்: ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக 11 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ
Byமாலை மலர்29 Jun 2016 5:02 AM GMT (Updated: 29 Jun 2016 5:03 AM GMT)
ஐதராபாத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 11 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்:
தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஐதராபாத் நகரில் இன்று சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையில் வெடிப்பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேற்கொண்டு சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஐதராபாத் நகரின் மூன்று அல்லது நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு அமைப்பு இதனை செய்து வருகிறது. உள்ளூர் போலீசார் சோதனையில் உதவி வருகிறார்கள். நகரில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனையில் 14 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஐதராபாத் நகரில் இன்று சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையில் வெடிப்பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேற்கொண்டு சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஐதராபாத் நகரின் மூன்று அல்லது நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு அமைப்பு இதனை செய்து வருகிறது. உள்ளூர் போலீசார் சோதனையில் உதவி வருகிறார்கள். நகரில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனையில் 14 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X