search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்
    X

    சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்

    சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் துணையுடன் மாவட்ட போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் துணையுடன் மாவட்ட போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில்  பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, இங்குள்ள படேசெட்டி பகுதிக்கு சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் மாவட்ட போலீசார் நேற்று விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் மூன்று மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×