search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் விறகு சேகரிக்க சென்ற மூன்று பேர் கரடி தாக்கி பலி
    X

    ஒடிசாவில் விறகு சேகரிக்க சென்ற மூன்று பேர் கரடி தாக்கி பலி

    ஒடிசா மாநிலம், நபராங்பூர் மாவட்டத்தில் விறகு சேகரிப்பதற்காக காட்டுக்குள் சென்ற மூன்று பேரை கரடி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், நபராங்பூர் மாவட்டத்தில் விறகு சேகரிப்பதற்காக காட்டுக்குள் சென்ற மூன்று பேரை கரடி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிசா மாநிலம், நபராங்பூர் மாவட்டத்தில் உள்ள போட்டாங்கி கிராமத்தை சேர்ந்த ஐந்துபேர் நேற்று விறகு சேகரிப்பதற்காக அருகாமையில் உள்ள காட்டுக்குள் சென்றனர். நடுகாட்டில் அவர்கள் சென்றபோது எதிர்பட்ட ஒரு கரடி அவர்களை சுற்றிவளைத்து தாக்கியது.

    இதில் மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் இருவர் அருகாமையிலுள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரடிகள் நடமாட்டம் உள்ள இப்பகுதி காடுகளுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

    எனினும், விறகுகளை சேகரித்து கடைத் தெருக்களில் விற்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால் பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் அவ்வப்போது காட்டுக்குள் கரடி, புலி போன்ற விலங்குகளின் தாக்குதலில் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.
    Next Story
    ×