search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்லம் தீ விபத்தில் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்
    X

    கொல்லம் தீ விபத்தில் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

    கொல்லம் தீ விபத்தில் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கேரள மாநிலம் கொல்லம் புட்டிங்கல் தேவி கோவிலில்  இன்று அதிகாலை 3 மணியளவில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 108 பேர் பலியாகி உள்ளனர்.  350 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆறுதல் கூறியுள்ளார்.

    ”தீ விபத்து சம்பவம் மிகவும் மோசமான நிகழ்வு. நான் கேரள முதல்வருடன் தொடர்புக்கொண்டு பேசினேன். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×