என் மலர்
தேர்தல் செய்திகள்

பாராளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் தங்கம், பரிசுப்பொருட்கள், சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் 24-ம் தேதி வரை நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ.3152.54 கோடி ஆகும்.
அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.214.95 கோடி பணம், ரூ.708.69 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3.54 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.38 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.8.13 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆந்திராவில் ரூ.137.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ரூ.48.68 கோடி, உத்தர பிரதேசத்தில் ரூ.40.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.524.34 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத் கடற்கரையில் மட்டும் ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019 #ElectionFlyingSquad #CashSeizure
கரூர்:
கரூர் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் முடிந்ததும், கூடு தல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் மற்றும் க லெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உள்ளிட்டோர் கரூர் தளவாபாளையத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கார்களில் சென்றனர்.
அப்போது மையத்தின் வெளிப்புறத்திலேயே கார்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் நடந்தே உள்ளே சென்றனர். பின்னர் வாக்கு எண்ணும் அறைக்குள் யாரும் நுழைந்து விடாதபடி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலை மற்றும் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் சுழற்சி முறை பாதுகாப்பு பணி, அனைத்து நடவடிக்கைகளும் சி.சி..டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை நீண்ட நேரமாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அறிவு றுத்தலின் பேரில் பாதுகாப் பினை மேலும் பலப்படுத்தக் கூடிய நடவடிக்கை, எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்பட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் உடன் இருந்தனர்.
அதிகாரி ஆய்வை தொடர்ந்து ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்) மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி தொலைபேசியில் என்னிடம் தேர்தலை நான் நிறுத்துவேன் என கூறும் அளவுக்கு மோசமான நிலை இருந்தது. மாவட்ட அதிகாரியே இப்படி இருக்கும் போது அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு குறைபாடுடன் இருப்பது ஆச்சரியம் இல்லை. வாக்கு எண்ணிக்கையை இவர்கள் தலைமையில் நடத்தக்கூடாது. வாக்கு எண்ணிக்கையை இந்த அதிகாரிகள் நடத்தினால் நியாயமாக இருக்காது.
கலெக்டர் எங்கள் மீது கொடுத்த பொய் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். விசாரணையில் கலெக்டர் அளித்த புகாருக்கு ஆதாரமாக சிசி டிவி. புட்டேஜை அவர் காட்ட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விரைவில் கலெக்டர் கூறியது மிகப்பொய் குற்றச்சாட்டு என்பதும், தேர்தல் அதிகாரி வழக்கத்தில் இல்லாத அளவில் ஒரு கலெக்டர் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, வேட்பாளர் மீதும், முகவர் மீதும் பொய் புகார் அளித்துள்ளார். எவ்வளவு தூரம் அவர் ஆளும் கட்சியின் ஊதுகுழலாக கரை வேட்டி கட்டாத மாவட்ட செயலாளராக செயல்பட்டிருக்கிறார் என்பது கோர்ட்டில் நிரூபிக்கப்படும்.
தேர்தல் கமிஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. புகார் மீது உடனே அதிகாரியை அனுப்பி விசாரணை நடத்தி யிருக்கின்றனர்.
கலெக்டரும், எஸ்.பி.யும் ஒரு தலைப்பட்சமாக நடந்து வருவதால் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பி.எஸ்.எப். படை வீரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கலெக்டரை மாற்றி விட்டு நியாயமான நேர்மையான ஒரு அதிகாரியை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றார். #congressjothimani #karurcollector

சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இது வரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இன்று தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வக்கீல் விஜயராகவன் ஆகியோர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
சூலூர் தொகுதியில் வருகிற 1-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்கிறார். தலைவர்கள் பிரசாரத்திற்கு பின்னர் தான் சூலூர் தொகுதி தேர்தல் களை கட்டும்.
நாளை மறுநாள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பிரசாரம் செய்ய உள்ளார். சூலூர் தொகுதியில் 1-ந் தேதிக்கு பின்னர் தான் பிரசாரம் சூடுபிடிக்கும். அ.தி.மு.க.மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சூலூரில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்.
சூலூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிவிட்டது. மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. ஆனால் சூலூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சூலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளது.
சூலூர் தொகுதியில் 9 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் வாகன சோதனை நடைபெற்றது.
சூலூர் பகுதி மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். #TNAssemblyByElection #TNElections2019
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இந்த முறையும் மோடியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்காக பாஜகவினர் இரவு பகலாக தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாரணாசியில் நேற்று மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நாம் அவ்வழியில் செல்லக்கூடாது. பிரதமர் மோடி தான் மீண்டும் வரவேண்டும் என நாடே ஆசைப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டாடும் வகையில் ஆட்சி நடைபெறுகிறது. நான் நேற்று ரோட்ஷோ நடத்தியபோது உங்களின் உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
மக்களின் உள்ளங்களை வெல்லும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும். பாஜக எப்போதும் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை நடந்தபோதும் உங்களின் ஊக்கம் சற்றும் குறையவில்லை.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #AddressingWorkers
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இதனையொட்டி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக நேற்று வாரணாசியில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்தினார்.

மகாராஷ்டிராத்தில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 11-ந் தேதி 7 தொகுதிகளுக்கும், 18-ந் தேதி 10 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 14 தொகுதிகளுக்கும் என மொத்தம் 31 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
4-வது மற்றும் இறுதிக்கட்டமாக வட மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, நந்துர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளுக்கு வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 17 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை (சனிக்கிழமை) ஓய்கிறது.
மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி கட்சிகள் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இவர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வருகிறார்.
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பிரதமருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் பங்கேற்கிறார்.
இதற்காக பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு பிரசார பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதேபோல அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று பிரசாரம் செய்ய மகாராஷ்டிராம் வருகிறார். ஷீரடி பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சங்கம்நேர் பகுதியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.
மகாராஷ்டிராத்தில் கடைசி கட்ட தேர்தல் நடைபெற இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே நாளில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.
இதனால் மும்பை உள்ளிட்ட 17 தொகுதிகளில் தேர்தல்களம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
டெல்லியில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆம் ஆத்மிக்கு காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கனவு இல்லை, ஆனால் நாட்டை காப்பாற்றவே கூட்டணிக்கு ஒப்புக்கொண்டோம். கூட்டணி அமைக்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஒருவேளை பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரே ஒரு நபர் தான் அதற்கு பொறுப்பாக இருக்க முடியும், அது ராகுல் காந்தி தான்.
டுவிட்டரில் எந்த கூட்டணியை அமைத்தீர்கள் என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். அவர்கள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருந்தால், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மேஜைக்கு வந்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் கருத்துகளை தெரிவிப்பதால் எந்த பிரச்சினையும் தீர்ந்துவிடாது.

தான் இறுதிவரை ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு முயற்சித்ததாக ராகுல் காந்தி கூறுவது, அவரது மனப்பாங்கு. அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.
காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் டெல்லியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தால், நான் அனைத்து (7) தொகுதிகளையும் காங்கிரசுக்கு வழங்க தயாராக இருக்கிறேன். ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு 4:3 தொகுதிகள் என்பது, பா.ஜனதாவுடன் கூட்டணி சேருவது போன்றது தான். அதாவது காங்கிரசுக்கு கொடுக்கும் 3 தொகுதிகளும் தோற்று தான் போகும். பா.ஜனதாவுக்கு 3 தொகுதிகளை கொடுக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை.
கேரளா, அரியானா, கோவா, மேற்குவங்காளம், உத்தரபிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் வலுவிழக்கச் செய்துள்ளது. காங்கிரசுக்கு ஒரு இந்துவின் ஓட்டு கூட கிடைக்காது. நாட்டை காப்பாற்ற விரும்பும் அனைத்து மதத்தினரும் ஒருங்கிணந்து ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுவார்கள்.
தொகுதி உடன்பாட்டில் சில நிபந்தனைகளை விதித்தனர். அவை எனக்கு கடினமானதாக இருந்தாலும் அவற்றை நாங்கள் ஏற்றுக்கொண்டதும், டெல்லி தவிர வேறு எங்கும் கூட்டணி இல்லை என்று பின்வாங்கினர். அடுத்த ஆட்சி அமைப்பதில் டெல்லியின் 7 தொகுதிகள் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார். Kejriwal #RahulGandhi #LokSabhaElections2019
கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, பிரகலாத்ஜோஷி, ஆர்.அசோக், அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்தும், சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயருக்கு கட்சி மேலிடத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தோம். தலைவா்கள் தங்களின் தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவு குறித்து எடுத்துக் கூறினர். அவர்கள் அளித்த தகவலின்படி, கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. இந்த எண்ணிக்கையில் இருந்து ஒரு தொகுதி கூடுமே தவிர அதில் குறைய வாய்ப்பு இல்லை.
சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் 2 தொகுதிகளுக்கு 2 பெயர்களை தேர்வு செய்து கட்சி மேலிடத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். கட்சி மேலிட தலைவர்கள், வேட்பாளர்களின் பெயா்களை நாளை (அதாவது இன்று) அறிவிப்பார்கள்.
அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பியவர்கள் அனைவரையும் அழைத்து பேசியுள்ளோம். கட்சியின் நலன் கருதி, தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க நாங்கள் தீவிர முயற்சி செய்வோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
பா.ஜனதா சார்பில் சிஞ்சோலி தொகுதியில் டாக்டர் உமேஷ்ஜாதவ்வின் சகோதரர் ராமச்சந்திர ஜாதவ் மற்றும் குந்துகோல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஐ.சிக்கனகவுடர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றால், சட்டசபையில் அக்கட்சியின் பலம் உயரும். தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலம் 104-ல் இருந்து 106 ஆக உயரும்.#LokSabhaElections2019 #Yeddyurappa







