என் மலர்
தேர்தல் செய்திகள்
தேனி பாராளுமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தேனி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பில் உள்ள குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு தரிசனம் முடிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தேனி தொகுதியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

கே:- தங்கதமிழ்செல்வன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?
ப:- என்னை எதிர்த்து டிடிவி தினகரனே நின்றாலும் எங்களுக்கு கவலையில்லை. அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #LSPolls #TheniConstituency
லக்னோ:
நாட்டில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்த நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.
2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இந்த மாநிலத்தில் தனியாக நின்று ஓரளவு கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதேபோல இந்த தேர்தலிலும் கைப்பற்ற முடியும் என்று கருதுகிறது.
இதற்காக பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்து உத்தரபிரதேசத்தில் பாதி பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அவரை நியமித்து உள்ளனர்.
பிரியங்காவின் வருகை உத்தரபுபிரதேச அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் இங்கு பல தொகுதியில் வெற்றி பெறும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கின்றனர்.
இதுபற்றி தொகுதி வாக்காளர்கள் சிலரை சந்தித்து கருத்து கேட்கப்பட்டது.
தக்காளி வியாபாரி சுந்தர் லால் என்பவர் கூறும்போது, “பிரியங்காவிடம் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை. அவர் இந்திரா காந்தியின் பேத்தி. ஆனால் அவர் இந்திராகாந்தி அல்ல. மன்மோகன்சிங் ஆட்சியை 10 ஆண்டுகள் பார்த்தோம். ஆனால் எதுவும் செய்யவில்லை.

பிரியங்காவோ, ராகுலோ பெரிதாக செய்ய வருகிறார்கள் என்று எதிர்பார்க்கவிலை. நான் வலுவான தேசம் அமைய ஓட்டு போடுவேன்” என்றார்.
மற்றொரு வியாபாரி ராஜேந்திர யாதவிடம் கேட்டபோது, அகிலேஷ் யாதவுக்குதான் எனது ஓட்டு என்று கூறினார்.
சுக்லா கஞ்சை சேர்ந்த ராஜுமிஸ்ரா என்பவர் கூறும்போது, “இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக உள்ள அன்னுதான்டன் சிறப்பாக செயல்படக் கூடியவர். அவருக்கு ஓட்டு போடுவேன்” என்றார்.
முதல்முறை வாக்காளரான அனுகிருத்திசிங் கூறும்போது, “பிரியங்காவின் வசீகரம் என்னை ஈர்த்துள்ளது. ஆனாலும் போதிய நம்பிக்கை ஏற்படவில்லை” என்று கூறினார்.
சவுத் அகமது என்பவர் கூறும்போது, “பிரியங்கா அரசியல் களம் இறங்கி இருப்பது சிறப்பானது. ஆனாலும் காலதாமதமாக அவர் வந்து இருக்கிறார். முன்கூட்டியே அவர் இறங்கி இருந்தால் நன்றாக அமைந்திருக்கும்” என்றார்.
கான்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சொனகர் அக்தர் கூறும்போது, “பிரியங்கா வருகை கட்சியில் திருப்பு முனையை ஏற்படுத்தும். தேர்தல் முடிவில் இங்கு காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியை கண்டு அனைவரும் ஆச்சரியப்படப் போகிறார்கள்” என்றார். #priyanka #rahulgandhi #parliamentelection

இந்நிலையில் சென்னை யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லோகேஷ் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், தண்டையார்பேட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls #ElectionFlyingSquad
புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தி கட்சியின் தலைவர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு இளைஞரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம் என்ற பெருமையை நாம் பெற முடியும். இவர் நன்றாக மக்கள் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வயது முதிர்வு காரணமாக சோர்வு ஏற்படும். வயது முதிர்ந்தோர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இளைஞர் என்பதால் வேட்பாளர் நாராயணசாமிக்கு சோர்வு ஏற்படாது. நீண்டநாட்கள் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு பணியாற்றுவார். நிறைய அனுபவத்தையும், நல்ல அனுபவத்தையும் அவர் பெறுவார்.
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்ய புதுவை வர உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் யார்? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, விரைவில் அறிவிக்கப்படுவார் என ரங்கசாமி தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி இழந்துள்ளார். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? என எழுப்பிய கேள்விக்கு மக்களுக்கு நன்றாக தெரியும். யார்-யார் எப்படி? என தெரியும். அனைவரையும் புதுவை மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர் என்று ரங்கசாமி தெரிவித்தார். #LSPolls #Rangaswamy
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் முறைப்படி அறிவிக்கா விட்டாலும் வைத்திலிங்கம் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார்.
அவர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.
என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கேசவனின் மகன் டாக்டர் நாராயணசாமி போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது, ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று காலை ஓட்டல் அண்ணாமலையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், புதுவை முன்னாள் முதல்- அமைச்சருமான ரங்கசாமி அறிமுகப்படுத்தினார். அவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து டாக்டர் நாராயணசாமி புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி அருணிடம் டாக்டர் நாராயணசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #Parliamentelection
தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி., இன்று திருச்செந்தூர் வட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்செந்தூர் கீழரதவீதி தேரடி அருகில் ஓட்டுவேட்டையை தொடங்கிய அவர் தொடர்ந்து பரமன்குறிச்சி பஜார், அய்யனார்நகர், பரமன்குறிச்சி கஸ்பா, வெள்ளாளன்விளை, வட்டன்விளை, குருநாதபுரம், சிறுடையார்புரம், வீரப்ப நாடார் குடியிருப்பு, கரிசன் விளை ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் கனிமொழி பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அ.தி.மு.க. அரசால் மாவட்டத்தில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை மாவட்டமாக மாற்றவேண்டும். அதற்கு என்னுடைய பங்கும் இருக்கவேண்டும். எனவே எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் மெஞ்ஞானபுரம், அணைத்தலை, பூலிக்குடியிருப்பு, நங்கை மொழி, செட்டியப்பத்து, தேரியூர், வேப்பங்காடு அடைக்கலாபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். மதியம் லங்கநாதபுரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். வேட்பாளர் கனிமொழியுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் சென்றிருந்தனர். #LSPolls #DMK #Kanimozhi
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை தொடங்கினார்.
இந்நிலையில் பெரியகுளம் தொகுதி வேட்பாளரை அதிமுக தலைமை திடீரென மாற்றி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முருகன், ஓ.பி.எஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முருகன் மீது கட்சி பிரமுகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. #ADMKCandidate #PeriyakulamCandidate
தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் விழுப்புரம்(தனி), கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற போகிறோம். மீண்டும் நம்முடைய மோடி பிரதமராக வரப்போகிறார். கருத்துக்கணிப்பும் அப்படித்தான் சொல்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக தமிழக அரசு, அமைச்சரவை கூட்டத்தை நடத்தி கவர்னருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக 7 பேரும் விடுதலை ஆவார்கள் என்று நம்புகிறேன்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கூறி வந்த தி.மு.க. ஆட்சி கட்டிலில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் தமிழுக்கும் ஒன்றும் செய்யவில்லை, மாநில சுயாட்சியையும் பெற்றுத்தரவில்லை.
இப்போது இந்த தேர்தலில் மாநிலத்தின் சுயாட்சியை பெற்றுத்தருவோம் என்று (அ.தி.மு.க., பா.ம.க.) நாங்கள் இருவரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த கூட்டணி அமைந்ததற்கு தம்பி சி.வி.சண்முகமும் காரணம். உள்ளாட்சி தேர்தல் ஜூன், ஜூலையில் வந்தே தீரும். அந்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறப்போவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
ஜெயலலிதா இல்லாமல் நாம் சந்திக்கிற முதல் தேர்தல் இது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் அழிந்து விடும், தலை தூக்க முடியாது என்று பேசியவர்கள் முகத்தில் கரியை பூசுகிற வகையில் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். தற்போது இந்த தேர்தலில் வெற்றிக்கூட்டணி அமைந்துள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். நம்மை பார்த்து ஏளனம் பேசியவர்கள் இந்த தேர்தலுக்கு பிறகு அரசியல் செய்ய முடியாத நிலை உருவாகும். ஆகவே எந்த சுணக்கமும் இல்லாமல் அனைவரும் சுறுசுறுப்பாக பணியாற்றி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும்.
1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.தோல்வி அடைந்தது. அம்மாவும் தோல்வி அடைந்தார்.
அ.தி.மு.க. இதோடு அழிந்து விட்டது என்று தீய சக்திகள் நினைத்து இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் 1998-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு பா.ம.க.கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் அம்மா மாபெரும் வெற்றி பெற்றார்.
2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு கேப்டன் கூட்டணி அமைத்தார். அம்மா முதல்-அமைச்சர் ஆவதற்கு உறுதுணையாக இருந்தார்.
தற்போது அ.தி.மு.க. இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்கு பா.ம.க., தே.மு.தி.க., ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.
இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். 5 ஆண்டு காலம் அ.தி.மு.க.ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

முதற்கட்டமாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரை சுதீஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அதிமுக தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து, கடை கடையாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் திறந்த வேனில் சென்று சுதீஷுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றும், நாட்டை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியால்தான் முடியும் என்றும் முதலமைச்சர் பேசினார். #LSPolls #EdappadiPalaniswami
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தயாரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை தொடர்பு கொண்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டு வருவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
கன்னியாகுமரி தொகுதியை பெற போட்டா போட்டி நிலவுகிறது. வசந்தகுமார், ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ், ராபர்ட் புரூஸ், அசோக் சாலமோன் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. இதேபோல், திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு செல்வபெருந்தகை, விஸ்வநாதன், விக்டரி ஜெயக்குமார், ஜெயக்குமார் (நாமக்கல்), ராணி ஆகியோர் ‘சீட்’ கேட்டு வருகின்றனர்.
ஆரணி தொகுதியில் போட்டியிட விஷ்ணுபிரசாத், நாசே ராமச்சந்திரன், சுமதி அன்பரசு ஆகியோர் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். திருச்சி தொகுதியில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குஷ்புவும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதால் இழுபறி நீடிக்கிறது. ஈரோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படாத நிலையில், விருதுநகர், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாய்ப்பு கேட்டு வருகிறார்.

இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாகவே ‘சீட்’ கேட்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். #LSPolls #Congress
ஆந்திர மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நடக்கிற தேர்தலில், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
இங்கு மத்திய மந்திரியாக இருந்த தந்தையை எதிர்த்து மகளே களத்தில் நிற்கிறார்.
மத்தியில் முந்தைய மன்மோகன் சிங் அரசில் மலைவாழ் பழங்குடியினர் விவகாரம், பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கேபினட் மந்திரியாக இருந்தவர் கிஷோர் சந்திரதேவ் (வயது 72).
சென்னை கிறித்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 6 முறை எம்.பி. பதவி வகித்த இவர் கடந்த மாதம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் ஐக்கியமானார்.

அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என காங்கிரஸ் கட்சி யோசித்தது. அதே கிஷோர் சந்திரதேவின் மகளும், சமூக சேவகியுமான சுருதிதேவியை வேட்பாளர் ஆக்கிவிட்டது.
ஆக தந்தை கிஷோர் சந்திரதேவை எதிர்த்து மகள் சுருதிதேவி போட்டியிட தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வியை எழுப்ப ஒரு வழி இல்லை.
ஏனென்றால் அங்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, கோடட்டி மாதவியை நிறுத்தி இருக்கிறது. எனவே மும்முனைப்போட்டி நிலவுகிறது.
இதேபோன்று விஜயநகரம் பாராளுமன்ற தொகுதியில் தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அசோக் கஜபதி ராஜூ போட்டியிடுகிறார். விஜயநகரம் சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக அவரது மகள் ஆதித்தி களத்தில் குதித்திருக்கிறார். இதுவும் மக்களால் பரபரப்பாக பேசப்படுகிறது. #LSPolls
திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் ஆஜரானார். அவருக்கு வழக்கு நகல் வழங்கப்பட்டது. இதன்பின்னர், வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.
இதன்பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான், ஜெயலலிதா தொடர்ந்த வழக்கையே சந்தித்தவன். எடப்பாடி பழனிசாமிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வாய்ப்பு இருந்தால் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்ய தயாராக இருக்கிறேன்.
என்னை பொறுத்தமட்டில் வழக்குகள் போடுவதன் மூலம் மட்டுமே எனது வேகம் அதிகரிக்கும். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? இல்லையா? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

எதையெல்லாம் செய்வோமோ அதைத்தான் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளது. மோடியை போல் வாய்ச்சொல்லில் வீரராக இல்லாமல் செயல்பாட்டில் காங்கிரஸ் வீரனாக இருக்கும்.
பா.ஜனதாவின் எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை. எனவே தான், பாஜக. மேலிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். மேலிடம் பட்டியலை வெளியிடும்போது தான் ராஜாவின் பெயர் பட்டியலில் இருக்கப்போகிறதா? அல்லது ஆட்டுப்பட்டியில் அடைபட்டு போகிறாரா? என்பது தெரியும்.
இந்தியா முழுவதும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டி இருப்பதால் காங்கிரஸ் பட்டியல் வெளியாவது தாமதம் ஆகி உள்ளது. விரைவில் பட்டியல் வெளியாகும். அதிமுக. தோல்வி பயத்தில் மிரண்டு போய் உள்ளது.
எப்படியாவது டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக அதிமுக.வுக்கு ஓட்டு போட்டால் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று கூறி வருகிறார்கள். ஓட்டுக்கு ரூ.1,500 அல்ல, ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் ஒரு இடத்தில் கூட அதிமுக.-பாஜக. கூட்டணி நிச்சயமாக ஜெயிக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #EVKSElangovan #ADMK #BJP






