search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament constituency"

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். #LSPolls #DMK #Kanimozhi

    சாயல்குடி:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கனிமொழி எம்.பி. சாயல்குடி, கமுதி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பா.ஜ.க. அரசு தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசின் பினாமியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் நலன் கருதாமல் ஆட்சி தொடர வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது.

    இந்த பாரளுமன்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக உள்ளது. மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவ-மாணவிகள் படிக்க முடியாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துக்கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.


    வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி ஆட்சி செய்த மோடி எந்தவிதமான முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என்று கூறிய பா.ஜ.க. ஆட்சியில் தான் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

    விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் ஆண்டுக்கு சராசரியாக 21,000 பேர் தற்கொலை செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி வேதாந்த நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து மூவாயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கியாஸ் மானியம் வழங்குவேன் என்று கூறிய மோடி, ஆட்சிக்கு வரும் போது சிலிண்டர் விலை 300 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.1,000.

    பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் நம் நாட்டை காப்பாற்ற முடியாது. ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் முகம் தான் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடி. தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வாக்களியுங்கள்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.  #LSPolls #DMK #Kanimozhi

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். #Parliamentelection

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

    இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் முறைப்படி அறிவிக்கா விட்டாலும் வைத்திலிங்கம் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார்.

    அவர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.

    என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கேசவனின் மகன் டாக்டர் நாராயணசாமி போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது, ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று காலை ஓட்டல் அண்ணாமலையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், புதுவை முன்னாள் முதல்- அமைச்சருமான ரங்கசாமி அறிமுகப்படுத்தினார். அவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து டாக்டர் நாராயணசாமி புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி அருணிடம் டாக்டர் நாராயணசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #Parliamentelection

    ×