search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிக்கப்வேன் மோதி தொழிலாளி சாவு
    X

    பிக்கப்வேன் மோதி தொழிலாளி சாவு

    • அந்த வழியாக வந்த பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே சந்தானகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி அருகே ஒட்டப்பட்டி ஏ.குமாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது55). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே சூடேகுப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தானகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×