என் மலர்
விருதுநகர்
- தனியார் நிறுவன ஊழியர்-முதியவர் பரிதாபமாக இறந்தார்.
- நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த நரேன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டி யன்நகரை ேசர்ந்தவர் கமலக்கண்ணன்(வயது36). இவர் விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தினமும் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு கமலக்கண்ணன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
விருதுநகர்-மதுரை ரோட்டில் வந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் கமலக்கண்ணன் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உடல்நிலை மோசமாகவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் வழியலேயே கமலக்கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவரது மனைவி சேர்மா தேவி கொடுத்த புகாரின்பே ரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
முதியவர்
சாத்தூர் அருகே உள்ள பெரிய ஓடைப்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ்(67). இவர் சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். சாத்தூர்- கோவில்பட்டி ரோட்டை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சுப்புராஜ் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த நரேன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் பலவேசம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து பகுதிகளிலும் ஆண்கள் பெண்களுக்கு தனி தனியாக சுகாதார வளாகங்கள் அமைத்து, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
- போக்குவரத்து தலைமை காவலரை தாக்கிய கடை ஊழியரை கைது செய்தனர்.
- ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் சாந்தரூபன்(வயது32). இவர் ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சங்கரன்கோவில் முக்குரோட்டில் வாகன ேசாதனையில் சாந்தரூபன் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். ேபாலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்ைல என விசாரித்தனர். அவரிடம் சாந்தரூபன் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் போக்குவரத்து போலீசாரை அவதூறாக பேசி சாந்தரூபனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் வாலிபரை பிடித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பிரித்விராஜ்(26) என்பதும் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
- வாலிபர்-கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவாரம்பட்டி சிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 36). இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷ பவுடரை கரைத்து குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாலசுப்பிர மணியம் மனைவி சங்கரேஸ்வரி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாலிபர்
ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மவுண்ட் சீயோன் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ஈஸ்வரன் (26). வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இவரை அரசுத் தேர்வு பயிற்சி வகுப்புக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈஸ்வரனின் உறவினர் மாரியப்பன் தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பட்டாசுகள்-கருந்திரிகள் பறிமுதல் செய்தனர்.
- 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
சாத்தூர் நாடார் தெருவை சேர்ந்தவர் சேர்மசங்கர்(வயது37). இவர் மதுரை-சிவகாசி ரோட்டில் உள்ள கொங்கலாபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கீழத்திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த கணேசன்(34) என்பவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி டி.கே.எஸ். ஆறுமுகம் ரோட்டை சேர்ந்தவர் முருகன்(48). இவர் சட்டவிரோதமாக கருந்திரிகளை பதுக்கி வைத்ததாக மாரனேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் இருந்து 80 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- டிரைவர்-பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
- அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை கஞ்சிநாயக்கன்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ் கிருஷ்ணா(43). டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. சகோதரர் வீட்டில் தங்கியிருந்த இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மல்லாங்கிணறு அருகே உள்ள கல்குறிச்சி இந்திராநகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி தனலட்சுமி. இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதில் விரக்தியடைந்த தனலட்சுமி விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 47 துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பணிகள் காலியாக உள்ளது.
- மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியல் வெளியீடப்படுகிறது.
விருதுநகர்
தமிழகத்தில் 47 துணை போலீஸ் சூப்பிரண்டு நிலை-1 பணி காலியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியலை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 47 காலிபணியிடங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒட்ட வேண்டும் என உள்துறை அறிவுத்துள்ளது.
- நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 4-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர்.
காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- நலிவடைந்த அரசு சிமெண்டு ஆலையை உலர் பதன முறைக்கு மாற்றி நவீனப்படுத்த வேண்டும்.
- பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்
மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த விருதுநகர் மாவட்டத்தில் 1970-ம் ஆண்டு முதல்வர் கருணா நிதி ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சார்பில் ஆலங்குளத்தில் சிமெண்டு ஆலை தொடங்கப்பட்டது.
ராஜபாளையம்-சிவகாசி நடுவே தொடங்கப்பட்ட இந்த ஆலையை சுற்றிலும் சுமார் 150 ஆண்டுகளுக்கு உரிய சுண்ணாம்புக்கல் கனிம வளங்கள் மிகுந்து காணப் பட்டன. விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த இந்த பகுதியில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி அந்த பகுதியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசின் சிமெண்டு ஆலை நிறுவப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு இந்த ஆலை நடைபெற்று வந்தது. சிவகாசியில் இருந்து ஆலங்குளம் வரை ெரயில்வே பாதை அமைக்கப்பட்டதால் ெரயில் மூலமாக பல்வேறு நகரங்க ளுக்கும் இலகுவாக சிமெண்டு மூடைகளை அனுப்ப ஏதுவாக இருந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு சூப்பர் ஸ்டார் சிமெண்டு என்று அறிமுகப்படுத்தி ரூ.240 கோடியில் நவீனப் படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரியலூர் அரசு சிமெண்டு ஆலைக்கு அந்தச் சமயத்தில் அந்த நிதி மாற்றப்பட்டு சிமெண்டு ஆலை நவீனப் படுத்தப்பட்டது.
ஆலங்குளம் சிமெண்டு ஆலை தற்போது வரை ஈர பதன முறையிலேயே தயாரிக்கப்பட்டு வருவதால் செலவு அதிகமாகவும், அதிகளவில் தொழிலா ளர்கள் தேவைப்படுகின்றனர். தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது .
இதை கருத்தில் கொண்டு நவீன முறைப்படி உலர் பதன முறைக்கு மாற்றினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் செலவினங்கள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறையும். தண்ணீர், மின்சாரம் மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும்.
இன்னும் 137 லட்சம் மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கல் இருப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள சுண்ணாம்பு கல்லே இன்னும் 65 ஆண்டு களுக்கு மேல் ஆலையை முறையாக இயக்குவதற்கு போதுமானதாக உள்ளது.
தற்போது சிமெண்டு ஆலையில் ரூ.340 விலையில் ''வலிமை சிமெண்டு'' தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதர சிமெண்டு விலையை விட தரமானதாகவும், வலிமையானதாகவும் உள்ளதாக கட்டிட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இதை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம் சிமெண்டு ஆலையில் இன்னும் 2,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுண்ணாம்புக்கல் எடுக்கா மல் உள்ளது.
தினமும் 1,200 டன் சிமெண்டு உற்பத்தி செய்வதற்கு உலர்பதன முறைப்படி ரூ.240 கோடி செலவு செய்தால் ஆலையை நவீனப்படுத்தியும், 250 பட்டதாரி களுக்கு வேலை கொடுத்தும், பல தொழிலா ளர்களை உருவாக்கியும், இதன் மூலம் பலருக்கு வருமானமும் ஈட்டுவதற்கு ஏதுவாக இருக்கும். கருணா நிதி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான ஆட்சியில் ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி இந்த பகுதியை வளம் பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்யப்படும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ஊரக வளர்ச்சி துறை அமைச்சரால் மாநில மற்றும் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்பு றங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்ட மைப்பு ஆகியவற்றிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு 2022-23-ம் நிதி ஆண்டு செயல் திட்டத்தின்படி ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்யப்ப டுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த விருதுக்கு தகுதி யான சமுதாய அமைப்பு களிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் 26.5.2023 முதல் வரவேற்கப் பப்படுகி றது. மேலும் கீழ்க்காணும் காலஅட்டவணையினை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 26.5.2023 முதல் 25.6.2023 வட்டார இயக்க மேலாண்மை அலகில் விண்ணப்பங்கள் பெறுதல், 26.6.2023 முதல் 08.7.2023 வட்டார இயக்க மேலாண்மை அலகில் 12 நாட்களுக்குள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். 9.7.2023 முதல் 20.7.2023 வரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகினால் கருத்துருக்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். 21.7.2023 முதல் 31.7.2023 வரை கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவில் ஒப்புதல் பெறுதல்ந நடைபெறும். 20.8.2023 கருத்துருக்கள் மாநில தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 3.8.2023 முதல் 18.8.2023 மாநில தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
19.8.2023 முதல் 25.8.2023 வரை மாநில அளவிலான குழுவினால் 6 நாட்களில் விருது பெற்றவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். மேற்காணும் விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடம் இருந்து 7.7.2023 தேதிக்குள் வட்டார இயக்க மேலாண்மை அலகு மற்றும் பகுதி அளவிலான கூட்ட மைப்புகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 6 காரணிகளின் அடிப்படை யில் தரமதிப்பீடு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டாஸ்மாக் கடை கொள்ளை முயற்சி நடந்தது.
- காமிரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவியது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் - மானாசாலை செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முருகன், பாலகிருஷ் ணன் ஆகியோர் விற்பனை யாளர்களாகவும், திருச்சுழியை சேர்ந்த இரு ளாண்டி சூப்பர்வைசராக வும் பணியாற்றி வருகின்ற னர்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை அடித்து நொறுக்கிவிட்டு கடையில் இருந்த மதுபான பாட்டில்களை மூட்டை களாக கட்டி தூக்கிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது இரவு ரோந்து செல்லும் வீரசோழன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் வருவதை கண்ட மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் திருடிய மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
இது தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே டாஸ்மாக் கடையில் புகுந்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தனர்.
- வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் முருகன் (39). இவர் 2 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார்.
இந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக வேலை தேடி வந்தார். அப்போது பத்தி ரிக்கையில் வெளியான விளம்பரம் ஒன்றை பார்த்து திருநெல்வேலியில் செயல்படும் ஏஜென்சி ஒன்றை தொடர்பு கொண்டார்.
அவர்கள் பிரேசில் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை தயாராக இருப்பதாகவும், அதற்கு ரூ. 1 ½ லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். அதை நம்பிய முருகன் 3 தவணைகளில் ரூ.1 ½லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் மேலும் ரூ.50 ஆயிரம் வாங்கி கொண்டு விசா ஒன்றை கொடுத்துள்ளனர். ஆனால் அது போலியானது என தெரியவந்தது.
அதுகுறித்து அவர் ஏஜென்சியிடம் கேட்ட போது, வேலை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ராஜபாளையம் கோர்ட்டில் முருகன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






