search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி
    X

    வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி

    • வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தனர்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் முருகன் (39). இவர் 2 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார்.

    இந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக வேலை தேடி வந்தார். அப்போது பத்தி ரிக்கையில் வெளியான விளம்பரம் ஒன்றை பார்த்து திருநெல்வேலியில் செயல்படும் ஏஜென்சி ஒன்றை தொடர்பு கொண்டார்.

    அவர்கள் பிரேசில் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை தயாராக இருப்பதாகவும், அதற்கு ரூ. 1 ½ லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். அதை நம்பிய முருகன் 3 தவணைகளில் ரூ.1 ½லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் மேலும் ரூ.50 ஆயிரம் வாங்கி கொண்டு விசா ஒன்றை கொடுத்துள்ளனர். ஆனால் அது போலியானது என தெரியவந்தது.

    அதுகுறித்து அவர் ஏஜென்சியிடம் கேட்ட போது, வேலை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து ராஜபாளையம் கோர்ட்டில் முருகன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×