என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி போராட்டம் நடைபெற்றது.
    • மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம்.

    தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ந்தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி போராட்டம் நடைபெற்றது.

    கள் இறக்கி போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக பொது மேடையில் கள் அருந்தி ஆதரவு தெரிவித்தார்.

    பனை மரத்தில் இருந்தும் நன்மை பயக்கக்கூடிய ஏராளமான உணவுப் பொருட்கள் நமக்கு கிடைக்கிறது. பனை மரத்தில் இருந்து கள், பதனீர், பனை வெல்லம், நுங்கு, பனம் பழம், பனக்கிழங்கு, விசிறி ஆகியவை கிடைக்கிறது.

    மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம். ரசாயனம், உரம் போன்ற எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல் பயன் தரக்கூடிய பனை மரம் ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 38 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    • பள்ளியில் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளதா என கடந்த 7-ந் தேதி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளியில் விட்டு சென்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டியிலுள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. படித்த அதே ஊரைச்சேர்ந்த பழனிவேலுவின் மகள் லியா லட்சுமி(4) என்ற சிறுமி கடந்த 3-ந் தேதி பள்ளி வளாகத்திலுள்ள செப்டிக் டேங்கில் விழுந்து இறந்தது. இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி விடுமுறை விடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை உயர்நீதி மன்ற உத்திரவுபடி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர் .

    பள்ளியில் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளதா என கடந்த 7-ந் தேதி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில் இப்பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெறாமல் விடுமுறையால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் செல்போன்களில் குறுந்தகவல், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இன்று முதல் பள்ளி திறக்கப்படும் எனவும், அனைவரும் முழு யூனிபார்ம்வுடன்பள்ளிக்கு 9 மணிக்கு வரவேண்டும் எனவும், இன்று சிறப்பு வகுப்புகள் ஏதும் கிடையாது என அறிவிப்பு அனுப்பினர். மாணவி இறந்த சம்பவம் நடந்து 16 நாட்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி மீண்டும் இன்று திறக்கப்பட்டது. பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளியில் விட்டு சென்றனர்.

    9 மணிக்கு பிரேயர் தொடங்கிய நிலையில் இறந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் சுமார் 50 பேர் பள்ளியை முன்பு முற்றுகையிட்டு எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.

    பள்ளி நிர்வாகம் பள்ளியில் உள்ள குறைபாடுகளை சரி செய்து விட்டோம் என்றும் இனி நாங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக வைத்திருப்போம் என்றோ உறுதி அளிக்கவில்லை. திடீரென நேற்று செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இன்று பள்ளி திறக்கப்படுகின்றது. பள்ளி நிர்வாகம் முறையாக பெற்றோர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் போட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். என்று கூறி பள்ளியின் முன்பு முற்றுகையிட்டனர்.

    • கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.

    மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐஐடி இயக்குநர் இவ்வாறு பேசுவது உண்மையில் வருந்தத்தக்கது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, "முதலில் கோமியத்தை அவர் குடிக்கட்டும், அவர் குடித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஐ.ஐ.டி போன்ற நிறுவனத்தின் இயக்குனர் இவ்வாறு பேசுவது என்பது உண்மையில் வருந்தத்தக்கது.

    மாட்டு மூத்திரம் உடலுக்கு கேடு என அறிவியல் ரீதியாக சொல்லப்படும் இந்த காலத்தில், அறிவியல் ரீதியான நிறுவனத்தின் இயக்குனரே இப்படி சொல்லியிருப்பதற்கான காரணம் புரியவில்லை.

    மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஐஐடி இயக்குநர் ஆளுநர் போல மாறிவிட்டார் என தெரிகிறது. அந்த அடிப்படையில் தான் இந்தக் கருத்துக்கள் வருகிறது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    அதுவும் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிற தமிழக மக்கள், அறிவியல் ரீதியாக சிந்திக்க கூடியவர்கள், பகுத்தறிவு மிகுந்தவர்கள், ஐஐடி இயக்குனர் கூறி விட்டார் என்பதற்காக அதை ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பது தான் நடைமுறை உண்மை" என்று தெரிவித்தார்.

    • தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
    • கடந்த 4 மாதங்களில் 7 கொள்ளை சம்பவம் நடை பெற்று உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சாலாமேடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் லியோ கிங் (வயது 47).

    இவர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    அருண் லியோ கிங் மனைவி ஜான் ஜாக்குலின். இவர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கிராமம் என்ற ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    அருண் லியோ கிங் சகோதரருக்கு பெங்களூருவில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    அவரை பார்ப்பதற்காக அருண் லியோ கிங் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த திங்கட்கிழமை பெங்களூருவிற்கு சென்றார்.

    நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் பக்க கிரீல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 17 அரை பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து அருண் லியோ கிங் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். தகவலின் பேரில் விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர நாத் குப்தா, தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மன்னார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு. அது கொள்ளை நடைபெற்ற வீட்டை மோப்பம் பிடித்து 3 தெருக்கள் வழியாக சென்று போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நின்றது.

    தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

    விழுப்புரம் சாலா மேடு பகுதியில் கடந்த 4 மாதங்களில் 7 கொள்ளை சம்பவம் நடை பெற்று உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே புதியதாக பொறுப் பெற்றுள்ள போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடர் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குரு பிரசாத் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவெண்ணைநல்லூர்;

    விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் குரு பிரசாத்( வயது15). விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பொங்கல் விடுமுறை என்பதால் நேற்று மதியம் நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் தென் பெண்ணையாற்றில் குளிக்க. சென்றுள்ளார். அப்போது ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென குரு பிரசாத் நீரில் மூழ்கி மாயமானார். உடன் வந்த நண்பர்கள் பொதுமக்கள் ஆகியோர் தேடிப் பார்த்தனர்.

    குரு பிரசாத் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு நிலைய அலுவலர் சுந்தரேஷ்வரர் தலைமையிலான மீட்பு குழுவினர் வரவைத்து நீரில் மூழ்கி மாயமான குரு பிரசாத்தை தீவிரமாக இரவு 11 மணி வரை தேடி வந்தனர்.

    வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் குளிரின் காரணமாகவும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர குமார் குப்தா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கி மாயமான குருபிரசாத்தை தேடும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .

    தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் இன்று 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் குருபிரசாத் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். குரு பிரசாத் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மைக்கேல் இருதயராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நண்பருடன் குளிக்கச் சென்று பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கப்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாமக இளைஞர் சங்கத் தலைவராக பரசுராமன் முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்தார்.
    • இது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருது முரண்பாடு எழுந்தது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.

    இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உங்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய தைத்திருநாள் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரது இல்லங்களிலும் இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பொங்கி வழியட்டும். உங்களது அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை நியமனம் செய்தது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருத்து முரண்பாடு எழுந்த நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து இன்று பொங்கல் கொண்டாடியுள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி புறப்பட்ட ரெயிலில் தரம் புரண்டது.
    • சத்தம் கேட்டு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.

    விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகள் ரெயில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் ரெயில் நிலையத்தை தாண்டும்போது இந்த ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகள் அப்படியே தண்டவாளத்தில் இருந்து இறங்கி நின்றன. 5 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், சத்தம் கேட்டு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால், ரெயில் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது. ரெயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்படடனர்.

    ரெயில்வே ஸ்டாஃப்கள் மற்றும் இன்ஜினீயர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரெயிலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக செல்லும் மற்ற ரெயில்களுக்கான வழி உடனடியாக சரி செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாரா? அல்லது சதி வேலையா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
    • மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    தமிழக காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறியுள்ளது. நாங்கள் மக்கள் பிரச்சனைக்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

    கவர்னர் நிகழ்ச்சி நடக்கும் போது தேசிய கீதம் பாட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள மரபு. இதை செய்யத்தவறிய அப்பாவு போன்றோர் கண்டனத்திற்குரியவர்கள். கவர்னர் நிகழ்ச்சியில் தேசியத்தையும், தேசத்தையும் அவமானப்படுத்துவதுபோல் நடந்துள்ளனர். மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும். தேசியம் வருவதை எதிர்ப்பதால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரிக்கிறேன்.

    திமுக அரசு மிக மோசமாக செயல்படுகிறது. இதற்கு காவல்துறை, துணைபோகாமல் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். திமுக அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடன் வாங்கியது தவிர வேறு ஏதும் செய்யவில்லை. தமிழக அரசின் மொத்த கடன் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் கோடி உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான் தமிழக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்த அரசை தூக்கி எறியாமல் தமிழகத்திற்கு விடிவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • சிபிஐஎம் புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு.
    • வேலை வழங்குவதற்கு பதிலாக பாஜக வேலையை பறிக்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.

    இந்நிலையில், மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம் என்று சிபிஎம் கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பதில் அவர் மேலும் கூறியதாவது:-

    மதவெறி, சாதிவெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம்.

    போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியல் சாசனத்தில் உள்ளவை, எந்த அரசும் அதை நிறுத்த முடியாது. திமுக வெளிச்சத்தில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று முரசொலியில் சொல்வது பொருத்தமானதல்ல.

    வேலை வழங்குவதற்கு பதிலாக பாஜக வேலையை பறிக்கிறது. அரசுத்துறையில் நிரந்தர பணி இருக்காது என்ற நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
    • கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியனது

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலக கே.பாலகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தார்.

    விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.

    மேலும், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது" என குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.

    • மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
    • கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலக கே.பாலகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதனால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

    விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

    மேலும், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

    அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • கடந்த 3-ந்தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது.
    • மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந்தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது. மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பனிர் வாசுகி, டி.கே.ரங்கராஜன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்எல்ஏக்கள் நாகை மாலி சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

    இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசனை மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    ×