search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளையில் குளம் தூர் வரும் பணி: விஜய் வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார்
    X

    களியக்காவிளையில் குளம் தூர் வரும் பணி: விஜய் வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார்

    • களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஸ் தலைமை தாங்கினார்
    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை பேரூராட்சி 2ம் வார்டில் உள்ள தூற்றுக்குளம் தூர்வாரி சீரமைக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது. இதையடுத்து தூர்வாரும் பணி தொடங்கியது.

    களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஸ் தலைமையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ஜே.சி.பி இயந்திரம் மூலம் தூர் வாரும் பணியினை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், வார்டு உறுப்பினர் விஜயா, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் மேக்கோடு சலீம், வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஸ்குமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், மாநில நிர்வாகி அமீர், பென்னட், ராஜு, ராஜன், டேவிட்ராஜ், சில்விஸ்டர், தாஸ், செல்வன்சிங், காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×