என் மலர்tooltip icon

    வேலூர்

    • கலெக்டர் பரிசுகளை வழங்கி வழியனுப்பினார்
    • தேநீர், சுண்டல் மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலக சுற்றுலா தினம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று ஒரு நாள் சுற்றுலா பயணத்தை கோட்டையிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வழியனுப்பினார். தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் விடுதி மாணவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கு உலக சுற்றுலா தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூலமாக 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இன்று ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மாணவர்கள் வேலூர் கோட்டை வளாகத்தில் இருந்து புறப்பட்டு வேலூரில் உள்ள மாவட்ட அறிவியல் மையம், வேலூர் கோட்டை, அரசு அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவாக சென்றனர்.

    சுற்றுலாவின் முக்கிய நோக்கமே பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு. காலை மாலை ஆகிய நேரங்களில் தேநீர், சுண்டல் மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அலுவலர் (பொ) இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வனத்துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு. இவரது வீட்டிற்குள் 5 அடி நீளமுடைய சாரைபாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குமரகுரு குடும்பத்தினர் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வீரர்கள் 5 அடி நீளம் கொண்ட சாரைபாம்பை பிடித்து பரவமலை காப்பு காட்டில் விட்டனர்.

    • வேலூர் அல்லாபுரத்தில் சேரும் சகதியுமான சாலை
    • மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 51-வது வார்டுக்கு உட்பட்ட அல்லாபுரம் அம்பேத்கர் நகர், ஜேஜே நகர், கே.கே.நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக தெருக்கள் முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டது.

    பணிகளும் நிறைவு பெற்றது. இருப்பினும் இன்னும் சாலை அமைக்கவில்லை.இதனால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியாக மாறியுள்ளது.

    பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்து கூட செல்ல முடியாத வகையில் இருப்பதாக கூறி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு சாலை அமைக்கவில்லை.

    இந்த நிலையில் தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச்சாக்கடை திட்ட பணிக்காக பள்ளம் தோண்டி குழாய் அமைக்கப்பட்டது. இதனால் சாலை முழுவதும் சேறும், சகதியாக மாறியுள்ளது.

    வீட்டை விட்டு வெளியே நடந்து கூட செல்லமுடியவில்லை.அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.

    உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சவுமியா சுந்தரி (வயது 27). எம்.எஸ்.சி பட்டதாரி.

    சவுமியா சுந்தரி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சவுமியா சுந்தரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் வந்தது
    • பள்ளி கல்லூரி மாணவர்கள், தி.மு.க. பிரமுகர்கள் என ஏராளமானோர் குவிந்தனர்

    வேலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக அவர் எழுதிய புத்தகங்கள், மற்றும் அவரது சிலையுடன் பேனா வடிவிலான முத்தமிழ் ஊர்தி வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே வந்தடைந்தது.

    கலெக்டர் குமார வேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், ஏ.பி.நந்தகுமார், அமலுவிஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது அங்கு வந்த முத்தமிழ் ஊர்திக்கு பட்டாசு வெடித்து மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பேனா சின்னதுடன் வந்த வாகனத்தை பார்வையிட பள்ளி கல்லூரி மாணவர்கள், தி.மு.க. பிரமுகர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலையுடன்செல்பி எடுத்துக் கொண்டனர்.மேலும் கருணாநிதி சிலைக்கு தி.மு.க.வினர் மற்றும் அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்,

    மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஏராளமான அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் வேதனை
    • நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் தாழ்வான பகுதிகள், குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    மலைகளில் நீரூற்று ஏற்பட்டு, நீரோடிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி அருகே உள்ள தேன்பள்ளி ஊராட்சி, வெங்கடாபுரம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கரில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.

    இந்த விவசாய நிலங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்து, அழுகிய நிலையில் காணப்படுகிறது.

    இதனால் நெற்பயிர்கள் றுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்துள்ளனர்.

    • வேலூரில் நாளை நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முதல் அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 100 சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நடைபெறுகிறது.

    அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நாளை நடக்கிறது.

    அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலை பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் இதுவரை முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாத பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் வந்து பதிவு செய்து பயனடையலாம்.

    மேலும், இம்முகாமில் பதிவு செய்ய தவறியவர்கள் வேலூர் கலெக்டர் கூடுதல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பதிவு மையத்தில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்டவாளத்தை கடந்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு மிஷின் காம்பவுண்ட் அசோக் நகரை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (வயது 48). தொழிலாளி.

    இந்த நிலையில் முரளி கிருஷ்ணன் இன்று காலை வீட்டில் இருந்து குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்றார்.

    அப்போது அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த திருப்பதி பாசஞ்சர் ரெயில் இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முரளி கிருஷ்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் முரளி கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிநீர் எடுத்து வர சென்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள், குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • நீர் வரத்து தொடங்கி உள்ளது
    • பொதுமக்கள் யாரும் குப்பைகள் கொட்ட அனுமதிக்க கூடாது

    வேலூர்:

    வேலூர் பலவன்சாத்து குப்பத்தில் பெரிய ஏரி உள்ளது. ஓட்டேரி அடுத்த நாயக்கநேரி, குளவிமேடு, வாணியங்குளம் ஆகிய பகுதிகளில் உருவாகும் மழை நீர் சிறு ஓடைகள் வழியாக ஓட்டேரி ஏரிக்கு வரும்.

    ஓட்டேரி ஏரியிலிருந்து வரும் உபரி நீர் மழைநீர் கால்வாய் வழியாக பலவன்சாத்து குப்பம் ஏரியை வந்தடையும்.

    இந்த ஏரி நிரம்பியதும், இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மீண்டும் கால்வாய் வழியாக சென்று தொரப்பாடி ஏரியில் கலக்கிறது. இந்த பலவன்சாத்துக்குப்பம் ஏரி நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பும் போது, ஏரிக்கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடும்.

    தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், பலவன்சாத்துகுப்பம் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை பலவன்சாத்துகுப்பம் ஏரியை திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது ஏரியை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடி உள்ளிட்ட முட்புதர்களை அகற்ற வேண்டும். ஏரியில் பொதுமக்கள் யாரும் குப்பைகள் கொட்ட அனுமதிக்க கூடாது.

    நிரம்பும் போது உடைப்பு ஏற்படாத வகையில் ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும்.

    வருவாய்த் துறையினர் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி கலெக்டர் கவிதா, வேலூர் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
    • ஒடுகத்தூர் வனத்துறை சார்பில் வழங்கப்படுகிறது

    அணைக்கட்டு:

    பசுமை தமிழகம் திட்டம் மூலம் ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்த ஆண்டுக்கான இலவச மரக்கன்றுகள் பெறுவதற்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதுகுறித்து வனச்சரக அலுவலர் இந்து வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது:-

    ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க நெல்லி, கொய்யா, மூங்கில், புளி, மாமரம், நாவல், நீர் மருது, புங்கன், செங்கருங்காலி, சவுக்கு, எலுமிச்சை, வேம்பு, இலுப்பை உள்ளிட்டவைகளில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் உள்ளது.

    இவை ஒரு ஏக்கருக்கு 200 முதல் 250 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே, விருப்பமுள்ளவர்கள் கம்ப்யூட்டர் பட்டா, ஆதார் அட்டை நகல், புகைபடம், வங்கி கணக்கு புத்தக நகல் போன்ற ஆவணங்களை ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து பதிவு செய்து கொள்ள கொண்டு தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை எடுத்து செல்லாலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செல்வியிடம் போலீசார் கேட்டபோது காதலன் பிரசாந்துடன் செல்வதாக தெரிவித்தார்.
    • இருவரும் மேஜர் என்பதால் செல்வியை அவரது விருப்பத்தின்படி பிரசாந்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24), கார் டிரைவர்.

    நெல்லூர்பேட்டையை சேர்ந்த தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருபவர் செல்வி (20). இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் செல்வியை அவரது குடும்பத்தினர் கடந்த 3 நாட்களாக வீட்டில் சிறை வைத்தனர். இதனை அறிந்த பிரசாந்த் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    குடியாத்தம் போலீசார் செல்வி குடும்பத்தினரை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

    பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே பிரசாந்த்- செல்வி இருவரும் அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வாழ்ந்தது தெரியவந்தது.

    செல்வியிடம் போலீசார் கேட்டபோது காதலன் பிரசாந்துடன் செல்வதாக தெரிவித்தார்.

    தகவல் அறிந்த செல்வி மற்றும் பிரசாந்தின் குடும்பத்தினர், உறவினர்கள் போலீஸ் நிலையத்தின் முன்பு குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இருவரும் மேஜர் என்பதால் செல்வியை அவரது விருப்பத்தின்படி பிரசாந்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சினிமாவில் வருவது போல காதலியை மீட்டு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கலெக்டர் அதிரடி உத்தரவு
    • 33 மருத்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலால் தினமும் 15 முதல் 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர்களுக்காக அரசு ஆஸ்பத்திரிகளில் தனித்தனியாக வார்டுகள் செயல்படுகிறது.வேலூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டம் முழுவதும் 521 களப்பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் நியமிக்கப்ப ட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் டெங்கு பாதிப்பு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க முதுநிலை பூச்சியியல் வல்லுநர் தலைமையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    மேலும் வட்டார அளவிலும், நகராட்சி, பேரூராட்சி அளவிலும் இரண்டாம் நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் 33 மருத்துவ முகாம்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படு கிறது. இந்த முகாம்களில் பாதிப்பு அதிகம் உள்ளவ ர்களை கண்டறிந்து சிகிச்சை பெற பரிந்துரைக்க ப்படுகின்றனர்.

    டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் கொசு புழு தடுப்பு பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி 3 நாட்கள் தொடர்ச்சியாக செய்யப்ப டுகிறது. குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கப்படுகிறது. வட்டார மருத்துவ அலுவலர்கள் நகர் நல மருத்துவர் அலுவலர்கள் மூலம் டெங்கு தடுப்பு பணி கண்காணிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் வீடுகளின் அருகே தண்ணீர் தேக்கி வைக்க கூடாது.

    வீடுகளில் கொசு தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×