என் மலர்tooltip icon

    வேலூர்

    • 20 பக்க பகவத் கீதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது.
    • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் இளைஞர்களுக்காக 20 பக்க பகவத் கீதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த பகவத் கீதை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.

    பகவத்கீதையின் காலத்தால் அழியாத போதனைகள் 20 பக்கங்கள் கொண்ட அச்சிடப்பட்ட பதிப்பின் மூலம் எளிய மொழியில் மாணவர்களுக்குச் சென்றடையும்.

    ஒரு லட்சம் புத்தகங்கள் அச்சிட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்களிடையே அவர்களின் தார்மீக மற்றும் ஆன்மீக கல்விக்கு பங்களிக்கும் வகையில் விநியோகிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் அதன் பின்னால் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    • ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றன.

    ஜோலார்பேட்டை:

    கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சேலம் அடுத்த தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே வந்தது.

    அப்போது திடீரென ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு பழுதாகி நடுவழியில் நின்றது.

    இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் வேறு ரெயில்களை பிடிக்க முடியாமலும், குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாமலும் கடும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக சேலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் சேலம் ரெயில் நிலைய அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி என்ஜின் கோளாறை சரி செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.

    திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் அதன் பின்னால் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றன.

    • சென்னையை சுற்றி புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
    • தற்போது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உயரத்தை ஒரு அடி அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் சம்பவம் பாதுகாப்பு சரியாக இல்லை என்பதை தான் குறிக்கிறது. பாராளுமன்றத்திற்குள் ஒரு குண்டூசி கூட எடுத்துச்செல்ல முடியாது. ஆனால் எப்படி அவர்களை விட்டார்கள் என்று தெரியவில்லை.

    அங்கு அத்துமீறி சென்றவர்கள் எங்களால் முடியும் என நிரூபித்துள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.டெல்லியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதனை பலப்படுத்த வேண்டும்.

    கவர்னர் முதலமைச்சரை அழைத்தாரா என்பது எனக்கு தெரியாது. சென்னையை சுற்றி புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

    2 இடங்களில் அந்த சாத்தியக்கூறுகள் உள்ளது. ராமஞ்சேரி பகுதியில் பெரிய டேம் அமைக்கலாம். ஆனால் இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

    அதேபோல் மற்றொரு இடத்திலும் கடந்த ஆட்சியில் நீர் நிலை அமைக்க பணிகள் தொடங்கபட்டது. அதுவும் பாதியில் கைவிடப்பட்டது.

    தற்போது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உயரத்தை ஒரு அடி அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும்.

    தமிழகத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். பொதுமக்கள் எதிர்ப்பதால் படாதபாடு பட வேண்டிய நிலை உள்ளது. மக்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு அதற்குப் பிறகு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 97 ஏக்கர் பரப்பளவில், ரூ.65 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது.
    • விமான நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி விமான நிலையம் உள்ளது. மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் சீரமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

    இதில் 97 ஏக்கர் பரப்பளவில், ரூ.65 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது.

    அதற்காக 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளப்பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இந்த நிலையில் விமான நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.

    விமான நிலைய நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை வழங்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    மேலும் மத்தியப்படைகளுடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் முக்கியமான இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வேலூரில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநிலங்களவையில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி. கே.சிங் கூறியதாவது:-

    உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலைய பணிகள் நிறை வடைந்துள்ளன. விமான நிலையத்திற்கு உரிமை வழங்கும் பணி நடந்து வருகிறது.

    அது தயாரான பிறகு 9 இருக்கைகள் கொண்ட விமானங்கள் வேலூரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்பட உள்ளது.

    இது இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் என கூறினார்.

    வேலூர் பகுதியில் வசிப்பவர்கள் விரைவில் சென்னை மற்றும் பெங்களூருக்கு இதன் மூலம் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

    வேலூருக்கு மருத்துவம், பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இது ஒரு பெரிய பயன்பாடாக இருக்கும். விரைவில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில்.
    • மின்விளக்கு ஒளியில் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரதராமியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    இரவு 7 மணி அளவில் கோவில் உட்புற சுவற்றில் மின்விளக்கு ஒளியில் விநாயகர் சன்னதியின் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.

    இதன்மூலம் சிவபெருமான் காட்சி அளித்ததாக பக்தர்கள் பரவச மடைந்தனர். இதனைக் கண்டு மெய் சிலிர்த்து வணங்கினர்.

    மின்விளக்கு ஒளி தெரியும் இடத்திற்கும் சிவலிங்கம் ஒளி உருவான இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் மின்விளக்கு எரிந்தவுடன் சிவலிங்கம் தென்பட்டது. பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது.

    • முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
    • அதிகாரிகள் மக்களிடம் விழிப்புணர்வு

    அணைக்கட்டு:

    மிக்ஜம் புயல் காரணமாக பென்னாத்தூர் பேரூராட்சியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைப்பதற்கான முகாம்கள் உணவு, குடிநீர், கழிவறை ஆகிய வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.

    மழை நேரங்களில் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்களை கைகளால் தொடுவதோ, கால்நடைகளை அதில் கட்டிவைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில், மரங்களுக்கு கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும் என பொது மக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் தலைமை யிலான பணியாளர்கள் பொது மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதிகளில் காய்ந்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ள மற்றும் ஆபத்தான நிலையில் மரங்களை அகற்றுதல், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் மண் கொட்டி சமன் செய்தல், மழை நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    • யானைகள் நடமாட்டத்தால் எச்சரிக்கை
    • வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனசரக பகுதியில் நாய்க்கனேரி, சேராங்கல், பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, குண்டலப்பல்லி உள்ளிட்ட காப்புக் காடுகளில் சிறுத்தைகள், யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

    சில நாட்களாக ஆந்திரா எல்லை நெல்லிபட்லா வனப்பகுதியிலிருந்து ஒரு குட்டி யானையுடன் கூடிய 7 காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான அரவட்லா, பாஸ்மார் மலை கிராமங்களில் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் புதுவரவாக ஆந்திரா மாநிலம் கடப்பனத்தம் பகுதியிலிருந்து 3 குட்டி யானைகளுடன் கூடிய மொத்தம் 9 காட்டு யானைகள் தமிழக எல்லையில் உள்ள கோட்டையூர் கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள நிலங்களில் பயிர்களை மிதித்து சேதப்படுத்தி தென்னஞ்செடிகளை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    மேலும் தமிழக எல்லையான பத்தலப்பல்லி கிராமத்திலிருந்து ஆந்திராமாநிலம் வீ.கோட்டா செல்லும் மலைப்பாதையில் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகின்றன.

    பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் பொதுமக்களிடையே எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வனச்சரகர் சதீஷ்குமார் கூறியதாவது:-

    வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்வதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். பத்தலப்பல்லி மலைப்பாதை வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு வாகனங்களில் மாலை 6 மணி முதல் இரவு நேரத்தில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழையும் பெய்தது.

    இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.

    நேற்று மாலை தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது வெளுத்து வாங்கியது. இதனால் வேலூர் நகரில் முக்கிய சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆறுபோல் ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. மேலும் இரவு முதல் விடியும் வரை தொடர்ந்து மழை பெய்தது.

    பலத்த மழை காரணமாக புதிய பஸ் நிலையம், கிரீன் சர்கிள், காமராஜர் சிலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தின் அடியில் வாகன ஓட்டிகள் மழைக்காக ஒதுங்கி நின்றனர். அந்த இடத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் கிரீன் சர்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதேபோன்று சேண்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில்தெரு, கன்சால்பேட்டை, இந்திரா நகர், தோட்டப்பாளையம் உள்பட பல்வேறு பகுதி களில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

    அதேபோல் திருவண்ணாமலை, செங்கம், செய்யாறு, வந்தவாசி, ஆரணி, போளூர், கண்ணமங்கலம், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், திருவலம், பொன்னை, பேரணா ம்பட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், பொன்னை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கியது.

    தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பாலாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு, பாலாற்றை ஒட்டி உள்ள செதுவாலை, கந்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளும் நிரம்பியுள்ளது.

    மேலும் பல ஏரிக்கு நீர்வ ரத்தும் அதிகரித்துள்ளது. அறுவடைக்கு ஏற்ற தை மாத பட்டத்தில் , நெற்பயிர் நடவு செய்ய ஏர் உழுது நிலத்தை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • போக்குவரத்துக்கு இடையூறு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அண்ணாசாலை, கிருபானந்தவாரியார் சாலை,நேதாஜி மார்க்கெட், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, வேலூர் பழைய பஸ்நிலையம், கிரீன்சர்க்கிள், காட்பாடி உட்பட பல இடங்களில் சாலைகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகிறது.

    இந்த மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டாலும் தொடர்ந்து சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சத்துவாச்சாரி மேம்பாலம் அருகே சாலையில் மாடுகள் கூட்டமாக போக்கு வரத்திற்கு இடையூறாக சுற்றி திரிகிறது.

    இதனால் அவ்வழியாக சென்ற பஸ், கார், பைக் போன்ற வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

    காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த பகுதிகளில் மாடுகள் சுற்றுகின்றன.

    இவ்வாறு கூட்டமாக மாடுகள் சாலைகளில் திரிவதால் வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

    சாலையில் நிற்கும் மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதாலும், சாலைகளில் ஓடுவதாலும் பைக்கில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்க கூடிய நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன.

    இந்த பகுதி வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் திடீரென மாடுகளின் ஓட்டத்தால் பயந்து நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இதிலும் சில மாடுகள் திடீரென சாலைகளில் நடந்து செல்வோர் மீது முட்ட வருவதால் பொதுமக்கள், முதியவர்கள் அச்சத்துடன் சாலையையும், மாடுகளையும் கடந்து செல்கின்றனர்.

    எனவே சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றியும் திரியும் மாடுகளை பிடித்து நிரந்த தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அட்டை உடனடியாக வழங்கப்பட்டது
    • வரிசையில் காத்திருந்து பதிவு செய்து பெற்றனர்

    வேலூர்:

    வேலூர் அரசினர் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் சிறப்பு பதிவு முகாம் இன்று நடந்தது.

    மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வேலூர் பா.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இதுவரை முதல் அமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறாதவர்களுக்கு ஒரே இடத்தில் சான்றுகளை சரிபார்த்து காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. மக்கள் வரிசையில் காத்திருந்து பதிவு செய்து, காப்பீடு அட்டையை பெற்றுச் சென்றனர்.

    • உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
    • மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    வேலூர்:

    வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சென்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

    பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.செந்தி ல்வேல்முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக டீன் சி. தண்டபாணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.பாபு ஜனார்த்தனம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஜே.மாதவன், முன்னாள் பதிவாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ்.விஜய்ஆனந்த் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
    • பலர் வாழ்த்துரை வழங்கினர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி குடும்பத்துடன் போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கிஷோர், திருப்பதி, மாவட்ட தலைவர் சரவணன் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் மோகன மூர்த்தி தொடக்க உரையாற்றினார்.

    ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் வெங்கடாசலம் செயலாளர் பிரேம் ஆனந்த் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் புருஷோத்தமன், செயலாளர் ரமேஷ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிராம சுகாதார செவிலியர் மற்றும் மேற்பார்வையாளர் சங்க தனலட்சுமி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் ஆசிரியர்கள் பணியாளர்களின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×