search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்றத்தில் அத்துமீறல் பாதுகாப்பு குறைபாட்டை காட்டுகிறது: அமைச்சர் துரைமுருகன்
    X

    பாராளுமன்றத்தில் அத்துமீறல் பாதுகாப்பு குறைபாட்டை காட்டுகிறது: அமைச்சர் துரைமுருகன்

    • சென்னையை சுற்றி புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
    • தற்போது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உயரத்தை ஒரு அடி அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் சம்பவம் பாதுகாப்பு சரியாக இல்லை என்பதை தான் குறிக்கிறது. பாராளுமன்றத்திற்குள் ஒரு குண்டூசி கூட எடுத்துச்செல்ல முடியாது. ஆனால் எப்படி அவர்களை விட்டார்கள் என்று தெரியவில்லை.

    அங்கு அத்துமீறி சென்றவர்கள் எங்களால் முடியும் என நிரூபித்துள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.டெல்லியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதனை பலப்படுத்த வேண்டும்.

    கவர்னர் முதலமைச்சரை அழைத்தாரா என்பது எனக்கு தெரியாது. சென்னையை சுற்றி புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

    2 இடங்களில் அந்த சாத்தியக்கூறுகள் உள்ளது. ராமஞ்சேரி பகுதியில் பெரிய டேம் அமைக்கலாம். ஆனால் இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

    அதேபோல் மற்றொரு இடத்திலும் கடந்த ஆட்சியில் நீர் நிலை அமைக்க பணிகள் தொடங்கபட்டது. அதுவும் பாதியில் கைவிடப்பட்டது.

    தற்போது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உயரத்தை ஒரு அடி அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும்.

    தமிழகத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். பொதுமக்கள் எதிர்ப்பதால் படாதபாடு பட வேண்டிய நிலை உள்ளது. மக்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு அதற்குப் பிறகு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×