search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Siva Sankar"

    • நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.
    • நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலூர்:

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பொங்கல் நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் உத்தரவு

    * தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக தெரியவில்லை.

    * நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.

    * நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வரும் 19-ந்தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும்.

    * நிதி நிலையை பொறுத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    • 6 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை ஏற்பதாக நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

    சென்னை:

    ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும் 6 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை ஏற்பதாக நாங்கள் தெரிவித்துவிட்டோம். பொங்கலுக்கு பின் மற்ற கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கலாம் என கூறியும் போராட்டத்தை அறிவித்துவிட்டதாக கூறினார்.

    ×