search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும்... அமைச்சர் தகவல்
    X

    நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும்... அமைச்சர் தகவல்

    • திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    • 6 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை ஏற்பதாக நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

    சென்னை:

    ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும் 6 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை ஏற்பதாக நாங்கள் தெரிவித்துவிட்டோம். பொங்கலுக்கு பின் மற்ற கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கலாம் என கூறியும் போராட்டத்தை அறிவித்துவிட்டதாக கூறினார்.

    Next Story
    ×