search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டியம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு
    X

    தொட்டியம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு

    • தொட்டியம் தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தலைவர் ஆய்வு செய்தார்
    • அனைத்து பகுதிகளிலும் சுகாதாரம் மேம்பட மற்றும் கொசுக்களை ஒழிக்க “புகை மருந்து” அடிக்கும் பணிகளையும் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தேர்வு நிலை பேரூராட்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் அறிவுரையின்படி முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் ஆலோசனை பெயரில் தொட்டியம் பேரூராட்சி தலைவர் ச.சரண்யாபிரபு பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கரு.சண்முகம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களின் ஒற்றுமையில் பேரூராட்சி பணியாளர்கள் முமு ஒத்துழைப்போடு தொட்டியம் பேரூராட்சி 5-வது வார்டில் சித்தூர் நியாய விலை கடை முதல் அங்கன்வாடிப் பள்ளி வரை அமைக்கப்பட்டு முடிவுற்ற சிமெண்ட் சாலைப் பணிகளை பேரூராட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் பேரூராட்சி அனைத்து பகுதிகளிலும் சுகாதாரம் மேம்பட மற்றும் கொசுக்களை ஒழிக்க "புகை மருந்து" அடிக்கும் பணிகளையும் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×