search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
    X

    பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

    • பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பேருந்து வசதி கோரி நடந்தது

    திருச்சி:

    முசிறி அருகே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து பேருந்து வசதி கோரி ஆனைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்த முசிறி போலீசார் மகாமுனி மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து பணிமனை முசிறி கிளை மேலாளர் ஆகியோர் சம்பவ இடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இந்தப் சாலை மறியல் போராட்டத்தால் முசிறி புலிவலம் சாலையில் சுமார் ஒரு மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×