search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூஜை அறையில் விளக்கேற்றிய போது தீப்பிடித்து மூதாட்டி சாவு
    X

    பூஜை அறையில் விளக்கேற்றிய போது தீப்பிடித்து மூதாட்டி சாவு

    • பூஜை அறையில் விளக்கேற்றிய போது தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்

    திருச்சி :

    திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள அம்பிகாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி காந்திமதி (வயது 72). சம்பவத்தன்று இவர் வீட்டில் பூஜை அறையில் சாமி கும்பிட குத்துவிளக்கு ஏற்றினார்.

    அப்போது எதிர்பாராமல் திடீரென்று இவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதையடுத்து காந்திமதி ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக காந்திமதி இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×