search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    கோப்புபடம்

    பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

    • 7 பவுன் நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
    • மீண்டும் ஊரிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் நொச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சபாபதி (வயது 68). இவரது மனைவி ரத்தினம் (60 ).இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று ஊருக்கு சென்று இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஊரிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×