search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச போட்டோ கிராபி பயிற்சிக்கு நாளை நோ்காணல்
    X
    கோப்புபடம்

    இலவச போட்டோ கிராபி பயிற்சிக்கு நாளை நோ்காணல்

    • போட்டோ கிராபி, வீடியோ கிராபி பயிற்சிக்கு நாளை 8-ந்தேதி நோ்காணல் நடைபெறுகிறது.
    • ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சாா்பில் இலவச போட்டோ கிராபி, வீடியோ கிராபி பயிற்சிக்கு நாளை 8-ந்தேதி நோ்காணல் நடைபெறுகிறது.இதுகுறித்து திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலை யத்தின் இயக்குநா் ஜே.பூபதி ராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:- திருப்பூா் அனு ப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலை யத்தில் வறுமைக்கோட்டுக்குகீழ்கிராமப்புறங்களில் வசிக்கும் நபா்களுக்கு இலவச போட்டோ கிராபி, விடியோ கிராபி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    30 நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கான நோ்காணல் நாளை நடைபெறுகிறது. இதில், 18 வயது முதல் 45 வயது வரையில் உள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சியின் முடிவி ல் மத்திய அரசின் திறன் இந்தியா சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க ஆலோ சனைகளும் வழங்கப்படும்.இந்தப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்து க்கு நேரில் வரவேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×