search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலாற்று பெருவெள்ளத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
    X

    பாலாற்று பெருவெள்ளத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

    • 120 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது
    • சமூக ஆர்வலர்கள், பாலாறு பாதுகாப்பு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    வாணியம்பாடி பாலாற்றில் கடந்த 1903-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானர்கள்.

    இறந்தவர்களுக்கான நினைவு சின்னம் சின்னபாலாற்று பாலம் அருகே கச்சேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருவெள்ளத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

    இதில் சமூக ஆர்வலர்கள், பாலாறு பாதுகாப்பு இயக்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×