search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரி பிடிபட்டது
    X

    12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரி பிடிபட்டது

    • கலப்பட டீசல் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • வியாசர்பாடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    சென்னையை அடுத்த செங்குன்றம் தியம்மாக்கம் பகுதியில் கலப்பட டீசல் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில், சூப்பிரண்டு கீதா மற்றும் டி.எஸ்.பி. சம்பத் ஆகியோரது மேற்பார்வையில் அப்பகுதியில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரியை பிடித்தனர். இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். லாரி உரிமையாளரான நிக்சனை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபோன்று புழல் காவாங்கரை தண்டல் காலனியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9½ டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×