என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/10/05/1771924-arrested3.jpg)
சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைத்து சோதனை செய்ததில் தவறான தகவல் என தெரிய வந்தது
- பூக்கடை போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
ராயபுரம்:
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.
அவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதாகவும் குரோம்பேட்டையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் உணவு டெலிவரி செய்யும் போது அந்த அறையில் இருவர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெடி குண்டு வைப்பது பற்றி பேசிக் கொண்டு இருந்ததாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக பூக்கடை சரக துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான், உதவி ஆணையர் பால கிருஷ்ண பிரபு ஆகியோர் தலைமையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைத்து சோதனை செய்ததில் தவறான தகவல் என தெரிய வந்தது.
இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியிலும் சோதனை செய்தனர். அதில் அப்படி எந்த ஒரு நபரும் இல்லை என தெரிய வந்து.
இதுகுறித்து தனிப்படை போலீசார் செல்போன் டவர் மூலம் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரோம்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் தான் வேலை செய்ததாகவும், அங்கு அப்போது வேலை பார்த்த அமீர் என்பவருடன் தகராறு ஏற்பட்டதால் தன்னை வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் அவரை பழிவாங்கும் நோக்கத்துடன் காவல் கட்டுப்பாட்டறைக்கு தவறான தகவல் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து பூக்கடை போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)