என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![நாட்றம்பள்ளி அருகே பைக் மோதி அரசு ஊழியர் பலி நாட்றம்பள்ளி அருகே பைக் மோதி அரசு ஊழியர் பலி](https://media.maalaimalar.com/h-upload/2022/07/18/1731275-accident2.jpg)
நாட்றம்பள்ளி அருகே பைக் மோதி அரசு ஊழியர் பலி
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- தர்மபுரி மாவட்டம், சின்ன முரட்டு பட்டியை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் வினோத்.
- வினோத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தார்.
நாட்டறம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம், சின்ன முரட்டு பட்டியை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் வினோத் (வயது26). இவர்நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தார். வினோத் தர்மபுரியில் இருந்து பஸ்சில் நாட்றம்பள்ளிக்கு வேலைக்கு வந்து செல்வது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் நாட்றம்பள்ளி வந்த வினோத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது நாட்றம்பள்ளியில் இருந்து வாணியம்பாடி நோக்கி பச்சூர் பகுதியை சேர்ந்த அசோகன் மனைவி சுமதி பைக் ஒட்டி வந்தார். அவர் ஓட்டி வந்த பைக் திடீரென நிலை தடுமாறி வினோத் மீது மோதியது. இதில் வினோத் மேம்பாலத்தில் இருந்த தடுப்பில் மோதி தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுமதி படுகாயம் அடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் சுமதியை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வினோத்குமார் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நாட்றம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)