search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர்.நகரில் 3 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
    X

    எம்.ஜி.ஆர்.நகரில் 3 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

    • மர்ம கும்பல் இசக்கி முத்து வீட்டுக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டனர்.
    • ஏற்பட்ட மோதலில் இசக்கிமுத்து, சுதாகர், கபில்தேவ் ஆகியோருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.

    போரூர்:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் தனது நண்பர்களான சுதாகர், கபில்தேவ், அஜித் ஆகியோருடன் சென்னை எம்.ஜி.ஆர் நகர் அண்ணா வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 'பிளக்ஸ் பேனர்' கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் இசக்கி முத்து வீட்டுக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏற்பட்ட மோதலில் இசக்கிமுத்து, சுதாகர், கபில்தேவ் ஆகியோருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா புகைக்க அழைத்த தகராறில் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    Next Story
    ×