search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
    X

     மாற்றுத்த திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்த போது எடுத்த படம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

    • மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது.
    • வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டன.

    தருமபுரி,

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது.

    இதில் மாற்றுத்த திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், தடகளம், இறகுபந்து, கபடி, எறிபந்து, சிறப்பு கையுந்து ஆகிய போட்டிகள் நேற்று நடந்தது. போட்டிகளில், ஏற்கனவே இணைய தளத்தில் பதிவு செய்த வீரர்கள், 80 பேர் பங்கேற்றனர்.

    போட்டிகளில், முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டன. போட்டிகளை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி பார்வையிட்டார்.

    Next Story
    ×