என் மலர்
புதுக்கோட்டை
- நெய்வாசலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
- தற்காலிகமாக கடை அமைத்திருந்த முதியவரின் டேபிள் உள்ளிட்டவற்றை காவலர் ஒருவர் சூறையாடினர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசலில் அண்மையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
அப்போது தன்னுடைய அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்ற இடத்தில் தற்காலிகமாக கடை அமைத்திருந்த முதியவரின் டேபிள் உள்ளிட்டவற்றை காவலர் ஒருவர் சூறையாடினர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதியவரின் கடையை எட்டி உதைத்து கீழே தள்ளிய காவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
- பிரதமரை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் தி.மு.க. சார்பில் தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமரை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது. எங்களை போன்றவர்கள் எல்லாம் அமைச்சராக வேண்டும் என்றால் அது திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும். எல்லோருக்கும் எல்லாம் தான் திராவிட மாடல் அரசின் கொள்கை.
சாலை சரியில்லை என கேட்கிறார்கள். சாலை அமைத்து கொடுத்தால் வேகமாக வாகனத்தை ஓட்டுகிறார்கள், அதனால் விபத்து நடக்கிறது. அதில், இறந்து போய் விடுகிறார்கள். உடல் நிலைதான் முக்கியம். 2026-2031 ல் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரும், நீங்கள் மீண்டும் முதல்வராக வருவீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சொன்னேன். செயல்படுபவர் தான் அமைச்சராக இருக்க வேண்டும்.
ஏன் என்றால் என்னுடைய துறையில் 108 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அவர்களை மேய்ப்பதே பெரிய சிக்கலாக உள்ளது. நிர்வாகத்தில் பல விதம் உள்ளன. வளர்ந்து வந்த இயக்கமாக தி.மு.க. உள்ளது. திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல் ஒருவன் பிறந்து வர வேண்டும். 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, அப்புறம் அவர்களால் வர முடிந்ததா, சொன்னால் கோபித்து கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் கூட்டணியில் உள்ளார்கள்.
காங்கிரசில் ஒருவர், இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள். சிறு துளி, பெருவெள்ளம் என்பது போல, வளர்ந்து வந்த கட்சிதான் தி.மு.க., கருணாநிதி 110 இடங்களில் வென்றார். அப்போது, அவர் ஆட்சியில் பங்கு கொடுத்தாரா? இந்த தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். இதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமென்றால் கேட்பதை செய்து கொடுப்போம். திராவிட இயக்கத்தை வெல்ல இனி ஒருவன் பிறந்துதான் வர வேண்டும்.
நேற்றுமுன்தினம் கூட நானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையும் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்டோம். என்ன செய்வது கூட்டணியில் இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறோம், போய் நிற்கிறோம்.
எந்த கூட்டணி என்றாலும் சரிதான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான் நம் கொள்கை. தனியாக நிற்கவேண்டும் என்றாலும் ரெடி. ப.சிதம்பரம் ஜெயித்த வழக்கு என்னாச்சு என்று முதல்வர் ஒரு முறை கேட்டார். நீங்கள் தான் நிறுத்தி வைக்க சொன்னீர்கள். நிறுத்தி வைத்து விட்டேன் என்றேன். ப.சிதம்பரமும் தற்போது நண்பராகி விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.
- ஆட்சியில் பங்கு கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பால் பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க.வுக்கு 42 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகின்றனர். அதை திருப்பி 24 இருந்தாலே பெரிய விஷயம். செங்கோட்டையனுக்கு அரசியல் புள்ளி விவரம் தெரியாது. அவருக்கு டூர் போட தெரியுமே தவிர, மக்களின் மனதை அறிய தெரியாது. 42 இல்லை 24 கூட கிடையாது, அதற்கும் குறைவுதான்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஒத்துப்போகாது என்பது எடப்பாடி பழனிசாமியின் கனவு, அவரது எதிர்பார்ப்பு. அதனால் அதைச் சொல்கிறார். எடப்பாடி எப்போதும் கனவு கண்டு கொண்டிருப்பவர் என்பது நாடறிந்த உண்மை. அன்புமணி ராமதாசுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்? அவர் மருத்துவத்தில் ஏதாவது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. அவர் பொருளாதார நிபுணரும் அல்ல, மேதையும் அல்ல. அவர் சொல்வது ஏற்கத்தக்கதும் அல்ல. இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை தந்துள்ள அரசு திராவிட மாடல் அரசு. இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.
பிரதமர் மோடி மலேசியாவுக்கு சென்றால் தமிழை புகழ்ந்து பேசுவார். ஏனென்றால் மலேசியாவில் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள இந்தியர்கள் தான் அதிகம். அதனால் அப்படி பேசுவார். ஆனால் ஒடிசாவுக்கு போனால் தமிழனை திருடன் என்பார். தமிழ் திருடனின் கையில் ஒடிசாவின் சாவி இருக்கிறது என்பார். பீகாருக்கு போனால் தமிழனை திருடன் என்பார். அங்கே எல்லாம் தமிழர்கள் திருடர்கள், ஆனால் வெளிநாட்டிற்கு சென்றால் அவர்களின் பார்வையில் தமிழர்கள் இணைப்பு பாலமாக விளங்க கூடியவர்கள்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி குறித்து பேச குழு அமைக்க எப்போது சரியான நேரம் வருகிறதோ அப்போது குழு அமைப்போமே தவிர, இது மிகப்பெரிய கூட்டணி. எல்லோருடனும் பேசுவதற்கு சுருக்கமான காலத்தில் அந்த கூட்டணியை பேசி முடிக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் எங்கள் தலைவர் வியூகம் வகுத்து கூட்டணியை முடிவு செய்வார். அதில் எந்தவித பிசுபிசுப்பும் வராது யாரும் கவலைப்பட வேண்டாம்.
ஆட்சியில் பங்கு கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதைக் கொடுக்கின்ற இடத்தில் எங்கள் தலைவர் இருக்கிறார். அவரை பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அது கூட்டணி கட்சி ஆதரவோடு தொடர வேண்டும் என்பது தான் எங்கள் தலைவரின் விருப்பம். எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி என்பது பொய்பாடி வாக்குறுதிகள். எல்லாமே பொய் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் ஆட்சியில் இருக்கும் போது இதையெல்லாம் செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. அவரை மக்கள் நம்பமாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் வராது. திராவிட மாடல் ஆட்சி தொடரும்.
எங்கள் கூட்டணியை பற்றி பேச ஆதவ் அர்ஜூனா யார்? எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அடிமை போல நடத்துவதாக கூறுகிறார்களா. எடப்பாடி பழனிசாமி தான் அடிமை பழனிசாமி. விஜய்யின் அடிமை ஆதவ் அர்ஜூனா. இந்த அடிமைகளின் பேச்சுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் கூட்டணியில் உள்ளவர்களை சம இடத்தில் வைத்துள்ளோம். யாரையும் ஆண்டான் அடிமையை போல் நடத்துகின்ற பழக்கம் தி.மு.க.வுக்கு எந்த காலத்திலும் கிடையாது என்றார்.
- கூட்டணிக்கு தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அமைக்காதது எதற்காக என்பது தெரியவில்லை.
- காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை முத்திரை குத்தப்படும்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லை அது தான் உண்மை. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகத்தை மேற்கோள்காட்டி பேச முயன்றபோது, ஆளும்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாராளுமன்றம் முடங்கி கிடக்கிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சி தலைவரை கூட பேச அனுமதிக்கவில்லை. பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அது குறித்து விசாரிக்க ஏன் இதுவரையில் குழு அமைக்கவில்லை? அது போன்ற பிரச்சினை ஏதும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை.
தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக இருந்தால் தான் இரண்டு பேரும் வெற்றி பெற முடியும் என்பது என் கருத்து. இரண்டு மாதங்களாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பேசி வருவதும், குழப்பமான நிலை நீடிப்பதற்கும் தி.மு.க. குழு அமைக்காதது தான் காரணம்.
தி.மு.க., காங்கிரஸ் இடையே இப்போது உள்ள மணக்கசப்பிற்கு தி.மு.க.வே காரணம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்திருந்தால் இதுபோன்ற சர்ச்சை கருத்துக்கள் ஒருபோதும் வந்திருக்காது. இனியும் தாமதிக்காமல் பேச்சுவார்த்தை குழுவை தி.மு.க. அமைக்க வேண்டும். இல்லையென்றால் மனக்கசப்புகள் மேலும் அதிகமாகத் தான் செய்யும்.
ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பத்து நாட்களுக்கு மேலாகியும் அதன் பிறகும் கூட்டணிக்கு தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அமைக்காதது எதற்காக என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு முடிவை தி.மு.க. உடனடியாக எடுக்க வேண்டும். தி.மு.க குழு அமைத்து பேசிவிட்டால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.
1967-க்கு பின்னர் நாங்கள் ஆட்சியில் இல்லை தான், தனித்து நிற்க கூடிய பலம் இல்லை தான். அதேவேளையில் நாங்கள் இருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணியாக ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை முத்திரை குத்தப்படும். அப்போதுதான் தி.மு.க. மதசார்பற்ற கூட்டணி என்று கூறிக்கொள்ள முடியும். எங்களை கூட்டலாக பார்க்க கூடாது, பெருக்கலாக பார்க்க வேண்டும்.
அ.தி.மு.க அரசு ஒருவேளை அமைந்தால், அது அ.தி.மு.க. அரசாக இருக்காது, பா.ஜ.க. ஆட்சியாகத்தான் இருக்கும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்று ரசிகர்கள் உள்ளனர்.
அந்த ரசிகர்கள் தொண்டர்களாக மாறலாம், தொண்டர்கள் வாக்களிக்கலாம். தமிழக வெற்றிக்கழகத்திற்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்பதும், விஜய்க்கு ஆதரவு இருக்கிறது என்பதும் உண்மை.
அந்த வாக்குகளால் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அது சீட்டாக மாறுமா என்பது கேள்விக் குறிதான். தமிழக வெற்றிக் கழகம் தற்போது களத்தில் சுறுசுறுப்பாக உள்ளது. விஜய் மீது வருமான வரி துறையின் தீர்ப்பு என்பது தேர்தலை எந்த விதத்திலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
இது ஊழல் கிடையாது, வரி கட்டவில்லை என்று தான் கூறுகிறார்கள். வரியை கட்டிவிட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். அவருக்கு மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது.
- த.வெ.க.வின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். ஏனென்றால் அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து சொன்ன வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.
அன்று பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று சொன்னவுடன் எப்படி சாத்தியம், ஆட்சியை முடக்கிவிடும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி இன்று ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று தெரிவித்துள்ளார். அன்று எல்லாவற்றையும் சாத்தியமில்லை என்று சொன்ன அவரது வாய் இன்று பலவற்றை வாக்குறுதியாக கொடுத்து வருகிறார். அவர் முழுக்க முழுக்க பொய் சொல்கிறார்.
எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது. அவரது காலத்திலும் இதை நிறைவேற்ற முடியாது. கிருஷ்ணராயபுரத்தில் குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பேரில் நடவடிக்கை எடுப்பார்கள்.
திருக்குறளை கூறுவார், திருக்குறளை மொழி பெயர்ப்பார், எதை வேண்டுமானாலும் மொழி பெயர்ப்பார். என்ன வேண்டுமானாலும் ஆடுவார், பாடுவார், நடிப்பார் ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது. ஐந்து ஓட்டை கூட வாங்க முடியாத சுயேட்சை வேட்பாளர் கூட, தான் வெற்றி பெறுவேன் என்று கூறுவார். தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும். அதேபோல்தான் த.வெ.க.வின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி குறித்து பத்திரிகையாளர்தான் சுமுகமான போக்கு இல்லை என்று கூறி வருகின்றனர். நாங்கள் குழு அமைத்து விடுவோம், பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில பேர் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பேசலாம்.
ஆனால், எங்களுடைய கூட்டணியில் இருந்து நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை, யாரும் போவதாகவும் இல்லை. அவர்கள் எங்களோடு இருந்தால்தான் வெற்றி என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்கு சென்றாலும் யாருக்கும் எந்த சீட்டும் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும். கூட்டணிக்கு புதிய கட்சியினர் வருவார்களா என்பதை தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார் என்றார்.
- தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது.
- நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அ.தி.மு.க.வின் ஒரு பகுதியும், அதேபோல பா.ஜ.க.வும் இணைந்ததை தவிர அதை நாங்கள் வலுவாக பார்க்கவில்லை, அது பலவீனமான கூட்டணி. எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க. வின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெல்ல முடியுமே தவிர, கூட்டத்தைக் கூட்டி காட்டி யாராலும் வெல்ல முடியாது.
தமிழ்நாட்டின் மக்களின் மனநிலையை இன்றைக்கு ஒவ்வொரு சர்வே மூலமாக நாங்கள் அறிந்து வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும், அதன் மூலமாக தங்களுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களுடைய விருப்பம். அந்த விருப்பத்தை மோடியாலோ, வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
கிரைம், மாபியா, கரப்ஷன் எல்லாம் பிரதமர் மோடியின் கட்சிக்கும், அவர்களது கூட்டணிக்கும் தான் பொருந்துமே தவிர எங்களுக்கு ஒரு துளியும் பொருந்தாது. 11 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு 12-வது தோல்வியை 2026 நிச்சயமாக தரும். துணை முதலமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொண்டி ருக்கிறார். தமிழ்நாட்டில் யாராலும் அசைக்க முடியாத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொல்லுகின்ற அளவிற்கு பலவீனமான ஆட்சி கிடையாது. பலமான ஆட்சியில் இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது. தமிழ்நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள், அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பது தெரியும். தங்களுக்கு எந்த ஆட்சி உதவி செய்யும் என்பது தமிழ்நாடு மக்களுக்கு தெரியும். மோடி ஆயிரம் குற்றச்சாட்டுகளை சொல்லலாம், குறைகளை சொல்லலாம். ஆனால் அவர் தனக்கு முன்னால் இருக்கக்கூடிய மாநிலங்களை எல்லாம், குறிப்பாக பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் பார்த்துவிட்டு அதைவிட தமிழ்நாட்டில் ஏதாவது குற்றங்கள் கூட என்று சொன்னால் அப்போது நாங்கள் பதில் அளிக்கிறோம்.
யார் வந்தாலும் வந்தவர்களை வரவேற்கின்ற இயக்கம் தான் தி.மு.க. அவர்களுக்கு உரிய மரியாதை தருகிற தலைவர் தான் மு.க.ஸ்டாலின். எங்களை நம்பி வருகின்றவர்கள் கெட்டுப் போபவர்கள் கிடையாது. மற்றவர்களை நம்பி செல்பவர்கள் மோசம் போவதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்து பேசிவிட்டு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு. தேசிய ஜனநாயக கூட்டணி காட்டும் ஒட்டுமொத்த கூட்டத்தையும் நாங்கள் மகளிர் அணி கூட்டத்தின் மூலமாகவே பீட் செய்து விடுவோம். பகுதி பகுதியாக மக்கள் அலையை கொண்டு செல்கின்ற சக்தி இந்தியாவிலேயே தி.மு.க.வுக்கு இருப்பதைப் போல வேறு எந்த இயக்கத்துக்கும் கிடை யாது.
நாங்கள் எப்போதும் எதிரிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இறுமாப்பு கொண்டவர்கள் கிடையாது. எதிரிகள் இருக்கிறார்கள், ஆனால் எங்களோடு மோதும் அளவிற்கு அவர்கள் வலிமையாக இல்லை. நாங்கள் சொன்னதை செய்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை தருகிறோம் என்று கூறினோம், அதை தந்துள்ளோம்.
நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் தருகிறோம் என்று கூறி ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்புவார்களா, அல்லது ஒரு கோடியே 32 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையைக் கொடுக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்புவார்களா என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எங்கள் வெற்றிக்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும்.
- யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்ட் காப்பி அடிப்படையிலேயே உள்ளது. கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினோம். அப்போது எடப்பாடி பழனிசாமி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிக்க வைப்பதை போல் மகளிருக்கு ஆசை வார்த்தை கூறி உரிமைத்தொகை தர போகிறோம் என்று தி.மு.க. கூறியுள்ளது என்று சொன்னார்.
உங்களால் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறியவர், இன்று 2000 ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறியதில் இருந்தே மகளிருக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது என்பதை அறியலாம்.
எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆனால் அங்கு பந்தியே போடவில்லை, அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம். எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது. அவரின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது.
ராகுல் காந்தி தான் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளது. எனவே கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. யாராலும் அதனை உடைக்க முடியாது. சிலர் எதிர்பார்க்கிறார்கள், அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது, அந்த பழக்கமும் கிடையாது. அவர்களை அரவணைப்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் பழக்கம். தற்போதும் அவர்களை அரவணைத்து கொண்டு தான் இருக்கிறார். அந்த அரவணைப்பிலிருந்து யாராவது செல்ல வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதற்கு எங்கள் தலைவர் தெளிவான பதிலை சொல்லிவிட்டார்.
வரக்கூடிய தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என டி.டி.வி.தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்கிறார். யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம். நிச்சயம் தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்றார்.
- எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார்.
- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீமான் எதுக்கு வேண்டும் என்றாலும் பொங்கல் வைப்பார். திராவிடம் இணைந்தது தான் தமிழ்நாடு. அதனால் திராவிட பொங்கல் கொண்டாடி வருகிறோம். மகாராஷ்டிராவில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தவுடன் தமிழர்கள் மீது தாக்குதல் என்று சொல்லிவிடுவார். அண்ணாமலை பேசிய இந்தி அங்கேயும் புரியவில்லை, இங்கேயும் புரியவில்லை.
எங்களுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது. அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தவும் முடியாது. அவர்கள் கூட்டணி போகப்போக தேய்ந்து கொண்டே போகுமே தவிர, பலப்படுத்த எப்போதுமே முடியாது.
எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார். நிறைய கட்சிகள் உருவாகி வருகிறது. லெட்டர் பேட் கட்சிகள், அந்த கட்சிகள் எல்லாம் வரும் என்று கூறி இருப்பார். ஜனநாயகனுக்கு பலரும் குரல் கொடுத்து இருக்கக்கூடிய நிலையில் அது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர் விஜய் குரல் கொடுக்காததை வைத்து அவருடைய தைரியத்தை தெரிந்து கொள்ளலாம்.
1965-ம் ஆண்டு நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் பராசக்தி. அன்றைய நிகழ்வுகள் இன்று எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் மாணவர் பட்டாளம் துணிந்து எழுந்து நடத்திய போராட்டம். அப்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு, தற்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு.
காங்கிரஸ், தி.மு.க.வினருக்குள் ஆட்சியில் பங்கு தொடர்பாக தற்போது எழுந்துள்ள விமர்சனத்தால் கூட்டணிக்குள் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. அவரவர்கள் அவர்களது விருப்ப கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது. அதில் சிறு துளியை மட்டுமே தந்துள்ளனர். நிச்சயமாக அதிகமாக தொகையை அவர்கள் தரவில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது கிடைத்த நிதி தற்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தான் தமிழ்நாட்டிற்கு சாலை, கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தது.
அமித்ஷா, மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகை தந்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்களுக்கு ஏமாற்றத்தத்தை தான் ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம்.
- தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு.
திருப்பரங்குன்றம் வழக்கில் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டை தவிர வேறு எங்கும் உடலை எரிக்க முடியாது. அதைப்போலத்தான் மற்ற பழக்க வழக்கங்களையும் மாற்றமுடியாது என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து சர்ச்சையானது. இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேய் கதையை அரசு அவிழ்த்துவிடுவதாக நீதிமன்றம் கூறுகிறது.
* பேய் கதை என நீதிபதிகள் கூறியதால் சுடுகாடு என்ற உதாரணத்தை நான் கூறினேன்.
* பேய் இருக்கிறது என்று கதை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு நான் சுடுகாடு என்று கூறினேன். அதில் தப்பில்லை.
* அரசு பேய் கதைகள் சொல்கிறது என நீதிபதிகள் சொல்லும்போது நான் கூறியதில் தவறில்லை.
* நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் கூறவில்லை. சட்டத்திற்கு உட்பட்டுதான் பேசினேன்.
* முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் அதனை சுட்டிக்காட்டும் உரிமை வழக்கறிஞராகிய எனக்கும் உண்டு.
* திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம்.
* தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு என்றார்.
- கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு சென்று வருகின்றன.
அறந்தாங்கி:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மறியுள்ளது. பின்னர் அதுவே தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 72 முதல் 90 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு நகரும்போது, இலங்கை மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும், அந்த இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை டெல்டா மற்றும் உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் எதிரொலியாக கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை 32 மீனவ கிராமங்கள் மற்றும் 2 மீன்பிடித்துறை முகங்கள் உள்ளன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு சென்று வருகின்றன.
இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நோடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் அடுத்தடுத்து உருவான புயல் சின்னங்களால் மீன்பிடி தொழில் முழுவதுமாக முடங்கியது. இந்த நிலையில் தற்போது காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்ற அறிவிப்பால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி உள்ளனர்.
- பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
- மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும்போது தமிழகத்தை மற்றும் மத்திய அரசு வஞ்சிக்கிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரேஷன் கார்டுக்கு இன்று 3000 ரூபாய் அறிவித்துள்ளோம். இதுவரை தமிழக வரலாற்றில் 2500க்கு மேல் கொடுக்கப்படவில்லை. 3000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு விடுவார்கள் என நம்புகிறீர்களா..?
எங்களது திட்டங்களை வைத்து தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துவிட்டன. தமிழகத்தில் நாங்கள் அமித் ஷாவை மண்ணை கவ்வ வைப்போம்,
உதயநிதியை முதலமைச்சர் என்று எப்போதும் நாங்கள் சொல்லவில்லை. துணை முதலமைச்சர் என்றுதான் கூறி வருகிறோம்.
இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் தான். எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைவராக வரலாம். தேர்தல் பணிக்காக அவர் இன்று சுழன்று பணியாற்றி வருகிறார்.
ஊழல் குற்றச்சாட்டு குறித்து கருத்து சொல்கிற தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அவர்தான் ஒண்ணாம் நம்பர் ஊழல்வாதி.
அமித் ஷா மேடை ஏறுவதற்கு தாமதமாவதற்கு கூட்டம் இல்லாததே காரணம். தமிழகத்தில் அமித் ஷாவுக்கு இடம் கிடையாது. பா.ஜ.க. பருப்பு தமிழகத்தில் வேகாது.
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முதலில் கூட்டணி கட்சிகளின் கூட்டம் தான் என்று அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளவில்லை. அமித் ஷா சொல்வதை கூட்டணி கட்சிகளிடமே நடக்கவில்லை. அப்புறம் எங்கு வெளியே நடப்பது.
தமிழக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறுவது தான் வேடிக்கையானது.
காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அது எங்கள் பிரச்சனையாகாது. இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிக பலமாக உள்ளது. இங்கிருந்து எந்த கட்சியும் வெளியே செல்லாது . மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
எங்களுடைய வெற்றி தெளிவாக உள்ளது தைரியமாக நாங்கள் உள்ளோம். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படக்கூடிய அவசியம் கிடையாது. எங்களுக்கு அடுத்தது யார் என்பது தான் தற்போது பிரச்சனை.
முதல்வர் சில தினங்களுக்கு முன் அறிவித்த ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் எந்த எதிர்மறை கருத்துக்களும் அவர்களிடம் இருந்து வரவில்லை.
90 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை கூறி வருகிறார். எந்த 90 நாட்கள் என்று அவர் தெரிவிக்கவில்லை. அண்ணாமலை எதையாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார் அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட அவசியமில்லை.
தமிழக அமைச்சர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி வருகிறார்கள் என்று நேற்று அமித் ஷா கூறியுள்ளார். நாங்கள் எங்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கவில்லை.
தி.மு.க. மீது எதையாவது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக கரூர் சம்பவத்திற்கும் செந்தில்பாலாஜிக்கும் சம்பந்தம் உள்ளது என்று பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார் . இது அவருடைய கண்டுபிடிப்பு. எங்கள் மீது பழி போட முடியாது.
தமிழகத்திற்கு வழக்கமாக ஒதுக்க வேண்டிய நிதியை தான் மத்திய அரசு ஒதுக்கியது. எங்களுக்கு சிறப்பு நிதி எதுவும் வரவில்லை என்று தான் நாங்கள் கூறுகிறோம்.
மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும்போது தமிழகத்தை மற்றும் மத்திய அரசு வஞ்சிக்கிறது.
காங்கிரஸ் வெளியேறப் போகிறது என்று எடப்பாடி பகல் கனவு கண்டு வருகிறார். தி.மு.க.வை குறை கூற எடப்பாடிக்கு ஒரு சதவீதம் கூட தகுதி கிடையாது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பேட்டியின்போது உடன் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத்அலி இருந்தனர்.
- 2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்.
- இந்தியாவிலேயே அதிக ஊழல் நடந்துள்ளது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயண நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் கோஷத்துடன் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையை தொடங்கினார். அப்போது, தமிழ்நாட்டில் மோடி தலைமையிலான அரசு அமைய வேண்டுமா? என கூட்டத்தினரிடம் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்கள் ஆமாம் என்று கோஷம் எழுப்பினர்.
பின்னர் அமித் ஷா மேலும் பேசியதாவது:-
தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்காக மன்னிப்பு கோருகிறேன். சோழ சாம்ராஜ்யம் ஆண்ட பூமியான புதுக்கோட்டையில் உரையாற்றுகிறேன்.
2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இந்தியாவிலேயே அதிக ஊழல் நடந்துள்ளது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான். உதயநிதியை முதலமைச்சராக்குவதே மு.க.ஸ்டாலினின் நோக்கம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது.
திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம். தேர்தல் அறிக்கையில் மிகக்குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி திமுக தான்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும், அதற்கான நேரம் வந்துவிட்டது.
அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.






