search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தே.சிந்தலச்சேரியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்
    X

    கோப்பு படம்.

    தே.சிந்தலச்சேரியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

    • தே.சிந்தலச்சேரியில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடைபெறுகிறது
    • நாளை (14-ந் தேதி) கலெக்டர் முரளிதரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், தேவாரம் உள்வட்டம், தே.மீனாட்சிபுரம் வருவாய் கிராமம் உட்கடை தே.சிந்தலச்சேரியில் நாளை (14-ந் தேதி) கலெக்டர் முரளிதரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    உத்தமபாளையம் வட்டத்தைச் ேசர்ந்த பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை (பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,

    விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் இதர துறைகள்) மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×