search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
    X

    மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

    • ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வந்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது.

    இதனிடையே கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தருமபுரி நகரில் இடி, மின்னலுடன் திடீர் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    இதையொட்டி ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதேபோல் மாவட்டத்தில் பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை பெய்தது.

    Next Story
    ×