என் மலர்tooltip icon

    நாமக்கல்

      ராசிபுரம்:

      ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 72). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலையில் அவரது மொபட்டில் நாமகிரிப்பேட்டையில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

      இந்த நிலையில் அரியாக்கவுண்டம்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த வாலிபர் சண்முகம் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தெய்வசிகாமணி மீது மோதியது. இதில் இரண்டு பேரும் காயம் அடைந்தனர். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து தெய்வசிகாமணி மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

      அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வசிகாமணி பரிதாபமாக இறந்தார். இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வாலிபர் சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சண்முகம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

      • ராஜம்மாள் (69) கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று காலை ஒட்டன் கோவில் பகுதியில் சாலையை கடப்பதற்காக ராஜம்மாள் நின்று கொண்டிருந்தார்.
      • வேகமாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

      குமாரபாளையம்:

      நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் சாலை, ஒட்டன்கோவில் பகுதியில் வசிப்பவர் ராஜம்மாள் (69) கூலித் தொழிலாளி.

      சம்பவத்தன்று காலை ஒட்டன் கோவில் பகுதியில் சாலையை கடப்பதற்காக ராஜம்மாள் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

      இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு காரணமான சரக்கு வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமாரபாளையம் போலீசில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு சரக்கு வாகன டிரைவரான கிழக்கு காலனியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (28) என்ற வாலிபரை கைது செய்தனர்.

      • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது
      • சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும்

      குமாரபாளையம்:

      நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று பேசுகையில், ஒரு துன்பகரமான இன்பத்தைப் பெறுவதற்கான நோக்கத்துடன் ஒரு மாணவரின் அதிகாரம் அல்லது மேன்மையைக் காட்டுதல்தான் ராகிங். நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அனைத்து மாணவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியிலான ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு, கவுன்சில்களுடன் கலந்தாலோசித்து இந்த ராகிங் ஒழுங்குமுறையை கொண்டு வருகிறது. மேலும் சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
      • இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

      நாமக்கல்:

      நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

      இந்த நிலையில் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு காணப் பட்டது. சாலை களில் மூடுபனி சூழ்ந்தது.

      திருச்சி, துறையூர், சேலம், மோகனூர், திருச்செங்கோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சூழந்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

      முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவு பனிமூட்டம் காணப் பட்டதால் விபத்தை தடுக்கும் வகையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் இருந்ததால் வேலைக்கு செல்வோரும் அவதிப் பட்டனர்.

      • சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
      • இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

      நாமக்கல்:

      உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்றது.

      இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

      இதில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியின 50 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மற்றும் குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட உள்ளார்கள்.

      இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

      • திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலின் உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவிலில் 25-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
      • இதையொட்டி அம்மனுக்கு அபிசேகம், அலங்கார தீபாராதனை, யாக பூஜைகள், கன்னிகா மற்றும் சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டது.

      திருச்செங்கோடு:

      நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலின் உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவிலில் 25-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

      இதையொட்டி அம்மனுக்கு அபிசேகம், அலங்கார தீபாராதனை, யாக பூஜைகள், கன்னிகா மற்றும் சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் அம்மன் கேதராம்பிகை அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

      மேலும் கொலு மண்டப மேடையில் பல்வேறு திருத்தலங்கள், புராணங்கள், இதிகாசங்கள், புகழ் பெற்ற தலங்கள் குறித்த பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இந்த கொலு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      ஒவ்வொரு நாளும் பத்ரகாளியம்மன் மூலவருக்கு அம்பிகை, கங்கணதாரணம்பிகை, குமுதாம்பிகை, மாங்கல்யதாராணம்பிகை உள்ளிட்ட பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

      வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கலசா பிசேகம், அன்னபாவாடை சாற்றல், சர்ப்ப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழாவுடன் நவராத்தி விழா பூஜைகள் நிறைவு பெறுகிறது.

      • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.
      • குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

      ராசிபுரம்:

      நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

      குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், கற்பிக்கப்படும் ஆரம்ப கல்வி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அங்கன்வாடி பணியா ளரிடம் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை போஷன் அபியான் செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

      மதிய உணவு

      அதேபோல் முத்துக் காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள மதிய உணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு, பயன்பெறும் மாண வர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை விரிவாக கேட்டு அறிந்து மாணவர்களுக்கு உணவு களை சுகாதார மாகவும் தரமானதாகவும் வழங்கிட வேண்டுமென பணியா ளர்களிடம் அறிவுறுத்தினார்.

      அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அரசு காலனியில் அங்கன்வாடி மேற்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் செங்குத்து உறிஞ்சி குழாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து முத்துக்கா ளிப்பட்டியில் இணைய வழி பட்டா வழங்குவதற்காக வரண்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

      • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
      • பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர்.

      பரமத்தி வேலூர்:

      சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

      தேங்காய்

      இந்த வாரம் நடந்த ஏலத்தில்18.07 குவிண்டால் எடை கொண்ட 5ஆயிரத்து 715தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.09-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.19-க்கும், சராசரி விலையாக ரூ.24.96-க்கும் என மொத்தம் ரூ.ஒரு 43ஆயிரத்து 603-க்கு விற்பனையானது.

      தேங்காய் பருப்பு

      அதேபோல் 340.47 1/2 குவிண்டால் எடை கொண்ட698-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.79.09-க்கும், சராசரி விலையாக ரூ.82.89-க்கும் விற்பனையானது.

      2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.35-க்கும், சராசரி விலையாக ரூ.76.99-க்கும் என மொத்தம் ரூ.26 லட்சத்து 62 ஆயிரத்து 811 -க்கு விற்பனையானது.

      சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 27லட்சத்து06 ஆயிரத்து 414-க்கு விற்பனையானது.

      • கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்து கிழக்குவளவு பகுதியில் மாசிலா அருவி அமைந்துள்ளது.
      • தற்போது இவ்வருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

      கொல்லிமலை:

      நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்து கிழக்குவளவு பகுதியில் மாசிலா அருவி அமைந்துள்ளது. தற்போது இவ்வருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

      கடந்த 2007-ம் ஆண்டு முதல் கொல்லிமலை யூனியன் சார்பில் கிழக்கு வளவு பகுதியை சேர்ந்த ஆண்கள் சுய உதவி குழுவின் கட்டுப்பாட்டில் சுற்றுலா பயணிகளிடம் சுங்க வரி கட்டணம் வசூல் செய்து மாசிலா அருவியின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

      தற்போது மாசிலா அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், ஆண்கள் சுய உதவி குழுவினர் மாசிலா அருவி நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

      அப்போது மாசிலா அருவியை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

      • நேற்று நடந்த பூ ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.
      • இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து ப.வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.

      பரமத்தி வேலூர்:

      சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் நேற்று நடந்த பூ ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.

      பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள பிலிக்கல்பா ளையம், சாணார்பாளையம், வேலூர் பரமத்தி, கரூர் மாவட்டம் சாமங்கி, வேட்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

      இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து ப.வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

      கோவில் திருவிழா மற்றும் சுப முகூர்த்த காரணங்களால் பூ தேவை அதிகரித்துள்ளது. பரமத்தி வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.170-க்கும், அரளி ரூ.280 -க்கும் விற்பனையாகின.

      இதே போல் ஒரு கிலோ சம்பந்தி பூ ரூ.250-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.600-க்கும் விற்பனையாகின. சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      • சோளக்காட்டில் பழங்குடியின மக்களின் உழவர் சந்தை அமைந்துள்ளது.
      • உழவர் சந்தையின் அருகே மலைபாம்பு ஒன்று இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

      கொல்லிமலை:

      நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சோளக்காட்டில் பழங்குடியின மக்களின் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த உழவர் சந்தையின் அருகே மலைபாம்பு ஒன்று இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

      அவர் உத்தரவின்பேரில் கொல்லிமலை வன சரகர் சிவானந்தம் தலைமையில் செங்கரை வனகாப்பாளர் கருணாநிதி, வாளவந்திநாடு வனகாவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 8 அடி நீளமுள்ள அந்த மலைபாம்பை மீட்டு நாச்சியம்மன் கோவில் அருகே உள்ள வன காப்பு காட்டில் விட்டனர்.

      • சாலையில் உள்ள ஒரு இடத்தில் மணல் குவாரி அமைத்து அங்கு கொட்டி வைத்து மணல்களை விற்பனை செய்து வந்தனர்.
      • ரசீது இன்றி கள்ள மார்க்கெட்டில் ஏராளமான மணலை விற்பனை செய்து வருவதாகவும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஒரு சிலர் புகார் செய்ததாக கூறப்படுகிறது.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஒப்பந்ததாரர் லாரிகள் மூலம் மணல்களை அள்ளி சென்று வலையபட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு இடத்தில் மணல் குவாரி அமைத்து அங்கு கொட்டி வைத்து மணல்களை விற்பனை செய்து வந்தனர்.

      இந்நிலையில் காவிரி ஆற்றில் ஒப்பந்ததாரர் அதிக அளவு மணல்களை அள்ளி சென்று உள்ளதாகவும், ஆனால் முறைப்படி மணல் விற்பனை செய்யவில்லை என்றும், ரசீது இன்றி கள்ள மார்க்கெட்டில் ஏராளமான மணலை விற்பனை செய்து வருவதாகவும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஒரு சிலர் புகார் செய்ததாக கூறப்படுகிறது.

      அதன் அடிப்படையில் கடந்த 10-ந் தேதி ஒருவந்தூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்ற அமலாக்கத்துறையினர் டிரோன் மூலம் அங்கு மணல் அள்ளிய குழிகளின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை சுமார் 2 மணி நேரம் அளந்து பார்த்துவிட்டு அதனைக் குறித்துக் கொண்டு சென்றனர்.

      இந்த நிலையில் நேற்று மீண்டும் அமலாக்கத்துறையினர் மோகனூர் காவிரி ஆற்றில் 2-வது முறையாக ஆய்வு செய்தனர். மாலை 4.30 மணிக்கு வந்த அதிகாரிகள் 6 மணி வரை சோதனை செய்து சென்றனர்.

      ×