search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The farmer died in the accident"

      ராசிபுரம்:

      ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 72). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலையில் அவரது மொபட்டில் நாமகிரிப்பேட்டையில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

      இந்த நிலையில் அரியாக்கவுண்டம்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த வாலிபர் சண்முகம் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தெய்வசிகாமணி மீது மோதியது. இதில் இரண்டு பேரும் காயம் அடைந்தனர். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து தெய்வசிகாமணி மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

      அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வசிகாமணி பரிதாபமாக இறந்தார். இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வாலிபர் சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சண்முகம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

      • மார்க்கெட்டுக்கு பூ கொண்டுவந்த போது பரிதாபம்
      • போலீசார் விசாரணை

      வேலூர்:

      வேலூர் அருகே உள்ள பாலமதி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 41) விவசாயி.

      இவர் நேற்று வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு பைக்கில் பூ கொண்டு வந்தார். உடன் அவரது உறவினர் நவீன் குமார் (17) என்பவரும் வந்தார். இருவரும் நேதாஜி மார்க்கெட்டில் பூக்களை விற்பனைக்கு வழங்கி விட்டு பின்னர் வீடு திரும்பினர்

      சாய்நாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு சிக்கன் கடை அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த பைக் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். பலத்த காயம் அடைந்த கருணா மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். நவீன்குமார் படுகாயம் அடைந்தார்.

      பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×