என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விஜயநகர பேரரசு காலத்தில் திரயம்க உடையார் என்பவரால் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது.
    • இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விஜயநகர பேரரசு காலத்தில் திரயம்க உடையார் என்பவரால் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது.

    இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம். கடந்த 51 ஆண்டுகளுக்கு முன்பு 1971-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்பதேர் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மேலும் தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தெப்பத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இந்த ஆண்டு மாரியம்மன் திருவிழா கடந்த 17 -ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. வருகிற 28-ந் தேதி தெப்பக்குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    அதற்கு முந்தைய நாளான 27-ந் தேதி வெள்ளிக்கிழமை தெப்போற்சவ திருவிழா நடத்தப்பட உள்ளது. அதற்கான கள ஆய்வுப் பணிகள் நடந்தது. கடந்த ஆண்டு 90 பேரல்கள் கொண்டு 20 அடிக்கு 20 அடி என அமைக்கப்பட்டிருந்த தெப்பம் இந்த ஆண்டு 150 பேரல்களை 28 அடிக்கு 28 அடியாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2 அடுக்குகளாக இருந்தது. தற்போது 3 அடுக்ககளாக அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்த தெப்பதேர் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் தாசில்தார் சுகந்தி, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன்,கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், நகர் மன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் நகரில் இன்று பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
    • நாமக்கல் பூங்கா சாைல, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, ெகாசவம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூ, பழங்கள் வாங்க அதிகளவில் திரண்டு வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    ஆயுதபூஜை விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் நகரில் இன்று பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

    நாமக்கல்

    நாமக்கல் பூங்கா சாைல, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, ெகாசவம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூ, பழங்கள் வாங்க அதிகளவில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தேவையான பழங்கள், பூ, பொரி மற்றும் சுண்டல், வாழை கன்று ஆகியவற்றை வாங்கி சென்றனர்.

    ஆயுதபூஜையை முன்னிட்டு இன்று வழக்கத்தை விட விற்பனை அதிகரித்த நிலையில் விலையும் உயர்ந்து காணப்பட்டது. நாமக்கல்லில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150 முதல் ரூ.200 வரையும், ஆரஞ்சு ஒரு கிலோ ரூ.100-க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.170-க்கும் விற்பனையானது. ேமலும் கொய்யாபழம் கிலோ ரூ.80-க்கும், திராட்சை கிலோ ரூ.220-க்கும் விற்பனையானது.

    பூக்கள் விலை உயர்வு

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.250- க்கும், அரளி கிலோ ரூ.520- க்கும், ரோஜா கிலோ ரூ.500- முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.500- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் ஏலம் போனது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்செங்கோடு

    இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம், பள்ளி பாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் இன்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.

    • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.
    • விண்ணப்ப படிவத்தில் 7-ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டு களுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில் மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டு காலத்திற்கும் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 1.10.2023 முதல் 31.12.2023 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரார்கள் தகுதியானவர்கள் ஆவர்.

    தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். விண்ணப்ப படிவத்தில் 7-ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவ லரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்த வர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் மட்டும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் “வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல்’’ நிகழ்ச்சி கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் மோகன் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் "வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல்'' நிகழ்ச்சி கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிர் சாகுபடி முறைகள், பயிர்பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தார். நாமக்கல் வேளாண்மை அலுவலர் மோகன் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    கோவை வேளாண்மை பல்கலைகழகம் சிறப்பு அலுவலர் இயற்கை வள மேம்பாடு (ஓய்வு) இயக்குநர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்னை கன்று தேர்வு முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்கள், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, கரையான் தாக்குதல், தென்னை குரும்பை உதிர்தல், உரமேலாண்மை, மற்றும் மண்ணிலும் தண்ணீரிலும் ஏற்படும் சத்துப்பற்றாக்குறை யினை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு உதவி வேளாண்மை அலுவலர் மாலதி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

    • ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    சிறப்பு அலங்காரம்

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம் பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு கோவிலில் உள்ள ராஜாசாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி, மோகனூர் பாலசுப்பிரமணிய சாமி, கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,-தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற -1 ந் தேதி நடைபெற உள்ளது.
    • இதைெயாட்டி விழாவிற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற -1 ந் தேதி நடைபெற உள்ளது. இதைெயாட்டி விழாவிற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான பகுதிகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் அமைப்பது, பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் இளையராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • திருச்செங்கோடு பிரிவில் காலியாக உள்ள, 20 ஊர்க்காவல் படை பணிக்கு, வருகிற 30-ந் தேதிக்குள் விண்ப்பிக்க வேண்டும்.
    • நாமக்கல் பிரிவிற்கு ஆண்கள் 11, பெண்கள் 4, திருச்செங்கோடு பிரிவிற்கு ஆண்கள் 4, பெண்கள் ஒன்று என, மொத்தம், 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல், திருச்செங்கோடு பிரிவில் காலியாக உள்ள, 20 ஊர்க்காவல் படை பணிக்கு, வருகிற 30-ந் தேதிக்குள் விண்ப்பிக்க வேண்டும்.

    இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல்படைக்கு, நாமக்கல் பிரிவிற்கு ஆண்கள் 11, பெண்கள் 4, திருச்செங்கோடு பிரிவிற்கு ஆண்கள் 4, பெண்கள் ஒன்று என, மொத்தம், 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊர்க்காவல் படையில் பணிபுரிய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்த பட்சம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப்பின்னணியும், எந்த அமைப்பிலோ, அரசியல் கட்சி சார்ந்தவராகவோ இருக்கக்கூடாது.

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இன்று அக்., 21 முதல், வரும், 30 வரை, நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஊர்க்காவல்படை அலுவலகத்தில், வரும் 30-ந் தேதி, மாலை, 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். ஆட்கள் தேர்வு நடக்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பள்ளி, கல்லுாரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் (இருப்பின்) ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பி இணைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
    • இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி இன்று 3 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 15 மி.மீட்டரும், 24-ந் தேதி 12 மி.மீட்டரும், 25-ந் தேதி 40 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்தும், 24 மற்றும் 25-ந் தேதிகளில் மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

    இதனிடையே வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 64 சதவீதமாகவும் இருக்கும்.

    மழைக்கு வாய்ப்பு

    சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் இறக்கை அழுகல் மற்றும் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியினை நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என்பதை பரிசோதித்து அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
    • நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த 188 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் டாக்டர் உமா., ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, 90 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து வீர தியாகத்தை போற்றும் வகையில் வீரவணக்க உறுதிமொழி போலீசார் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் திரளாக பங்கேற்றனர்.பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    • மோகனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
    • நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையம் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவர் மோகனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் நிதி நிறுவனத்திற்கு வசூல் பணிக்காக பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம் பாளை யத்திற்கு சென்றுள்ளார்.

    கார் மோதியது

    பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் அனிச்சம்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்ல நாமக்கல்- கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார்.

    டிரைவர் கைது

    இந்த விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்க ணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    கேரளா

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிக பட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கும் ஏலம் போனது.

    விலை உயர்வு

    இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்ச மாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவுதமி தலைமையிலான அதிகாரிகள் கூடச்சேரி கல்லாங்காடு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரின் உத்தரவுப்படி நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவுதமி தலைமையிலான அதிகாரிகள் கூடச்சேரி கல்லாங்காடு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சேம்பர் அருகே ராசாம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதி இன்றி பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திர டிரைவர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து உதவி புவியியலாளர் கவுதமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×