search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    X

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

    • நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற -1 ந் தேதி நடைபெற உள்ளது.
    • இதைெயாட்டி விழாவிற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற -1 ந் தேதி நடைபெற உள்ளது. இதைெயாட்டி விழாவிற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான பகுதிகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் அமைப்பது, பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் இளையராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×