search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே கார் மோதி நிதி நிறுவன ஊழியர் பலி
    X

    பரமத்திவேலூர் அருகே கார் மோதி நிதி நிறுவன ஊழியர் பலி

    • மோகனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
    • நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையம் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவர் மோகனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் நிதி நிறுவனத்திற்கு வசூல் பணிக்காக பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம் பாளை யத்திற்கு சென்றுள்ளார்.

    கார் மோதியது

    பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் அனிச்சம்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்ல நாமக்கல்- கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார்.

    டிரைவர் கைது

    இந்த விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×