search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sales promotion"

    • நாமக்கல் நகரில் இன்று பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
    • நாமக்கல் பூங்கா சாைல, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, ெகாசவம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூ, பழங்கள் வாங்க அதிகளவில் திரண்டு வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    ஆயுதபூஜை விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் நகரில் இன்று பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

    நாமக்கல்

    நாமக்கல் பூங்கா சாைல, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, ெகாசவம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூ, பழங்கள் வாங்க அதிகளவில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தேவையான பழங்கள், பூ, பொரி மற்றும் சுண்டல், வாழை கன்று ஆகியவற்றை வாங்கி சென்றனர்.

    ஆயுதபூஜையை முன்னிட்டு இன்று வழக்கத்தை விட விற்பனை அதிகரித்த நிலையில் விலையும் உயர்ந்து காணப்பட்டது. நாமக்கல்லில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150 முதல் ரூ.200 வரையும், ஆரஞ்சு ஒரு கிலோ ரூ.100-க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.170-க்கும் விற்பனையானது. ேமலும் கொய்யாபழம் கிலோ ரூ.80-க்கும், திராட்சை கிலோ ரூ.220-க்கும் விற்பனையானது.

    பூக்கள் விலை உயர்வு

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.250- க்கும், அரளி கிலோ ரூ.520- க்கும், ரோஜா கிலோ ரூ.500- முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.500- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் ஏலம் போனது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்செங்கோடு

    இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம், பள்ளி பாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் இன்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.

    • திங்கட்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
    • கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    கடலூர்:

    பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. மாட்டுப்பொங்கல் இந்த நாளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை நன்றாக குளிப்பாட்டி, அவைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு மற்றும் அலங்கார பொருட்கள் அணிவித்து அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கு அழைத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பி

    ன்னர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கால்நடை களை ஊர்வலமாக கொண்டு செல்வார்கள். இதைத்தொடர்ந்து கால்நடைகளுக்கு பொங்கல், பழங்கள் வழங்குவது வழக்கம். மேலும் விவசாய நிலங்களில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.


    இந்த விழாவையொட்டி பண்ருட்டி கடைவீதியில் கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் மூக்கணாங்கயிறு, சலங்கை மணி, பெல்ட், அலங்கார கயிறுகள், பலூன்கள், கால்நடைகளை கட்டி இழுப்பதற்கான புதிய கயிறுகள், கொம்புகளுக்கு தீட்டப்படும் வண்ணங்கள், கலர் பவுடர்கள், பலூன்கள் ஆகிய அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் மற்றும் வீடுகளில் கால்நடைகளை வளர்க்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான விதவிதமான அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    ×