என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவலர் நினைவு சின்னத்தில்மலர் வளையம் வைத்து மரியாதை

    • பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
    • நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த 188 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் டாக்டர் உமா., ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, 90 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து வீர தியாகத்தை போற்றும் வகையில் வீரவணக்க உறுதிமொழி போலீசார் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் திரளாக பங்கேற்றனர்.பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×