என் மலர்
நீங்கள் தேடியது "காவலர்களுக்கு அஞ்சலி"
- பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல்:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த 188 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் டாக்டர் உமா., ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, 90 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து வீர தியாகத்தை போற்றும் வகையில் வீரவணக்க உறுதிமொழி போலீசார் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் திரளாக பங்கேற்றனர்.பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- நினைவு சின்னத்திற்கு மலர்வளையம் வைத்தனர்
- 63 குண்டுகள் முழங்கிட அரசு மரியாதை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமை தாங்கி பணியின் போது உயிர் நீத்த காவலர்கள் நினைவு சின்னத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தொடங்கி வைத்தார். பின்னர் 63 குண்டுகள் முழங்கிட போலீசார் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குமார், ரவிச்சந்திரன், பிரபு, சுரேஷ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் உள்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்று பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தினர்.






