என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • தெய்வமணி ( 35) . இவர் அந்த பகுதியில் தண்ணீர் இல்லாத 60அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
    • இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தெய்வமணி ( 35) . இவர் அந்த பகுதியில் தண்ணீர் இல்லாத 60அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றுக்குள் தவறி விழுந்த தெய்வமணி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராசிபுரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த தெய்வமணியை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கதிரேசன் லைன் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (39) தனியார் மில் தொழிலாளி.
    • நேற்று மாலை இவர் வசிக்கும் சிமெண்ட் அட்டை வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை, கதிரேசன் லைன் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (39) தனியார் மில் தொழிலாளி.

    நேற்று மாலை இவர் வசிக்கும் சிமெண்ட் அட்டை வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த இவரது மனைவி மலர்கொடி, (36) மகள் பானுமித்ரா, மகன் மனோஜ்குமார் ஆகியோர் வெளியில் தப்பி வந்தனர். பூஜை நாள் என்பதால், பானுமித்ரா வீட்டில் சுவாமி படங்களுக்கு முன் தீபம் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தீ பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து தீயை அணைத்தனர். முன்னதாக அவ்வழியே வந்த நகராட்சி கவுன்சிலர் ராஜ், தீ விபத்து ஏற்பட்டது கண்டு, அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

    இது குறித்து குமார பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு‌ ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது.
    • இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொதுமக்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது.

    இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

    மேலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 1,40,000 மக்கள் தொகை உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
    • கொசவம்பட்டி குப்பை கிடங்கு 2 உள்ளிட்ட 6 நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் கொண்டு செல்லப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 1,40,000 மக்கள் தொகை உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட குப்பைகள் தினசிரி மார்க்கெட், தினசரி சந்தை, சேந்தமங்கலம் சாலை, முதலைப்பட்டி, கொசவம்பட்டி ரோஜாநகர் , கொசவம்பட்டி குப்பை கிடங்கு 2 உள்ளிட்ட 6 நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் கொண்டு செல்லப்பட்டன. அகற்றப்பட்ட குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப்பட்டு கடைகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன. மக்காத குப்பைகளை இது குறித்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகன்றன.

    நகராட்சி கமிஷனர் சென்னகேசவன் கூறியதாவது:-

    ஆயுத பூஜையை முன்னிட்டு நகராட்சி பகுதியில் 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலை களில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையில் குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்றார். 

    • ஜெயராஜ் (வயது 45). இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.
    • வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் கிழக்கு வண்ணாந்துறை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 45). இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை . இதுகுறித்து ஜெயராஜ் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கூரை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இருப்பினும் கூரை வீட்டுக்குள் இருந்த துணிகள், உணவு பொருட்கள், பாத்திரங்கள், ஆவணங்கள், பீரோ, கட்டில், டி.வி. உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. 

    • ஆயுதபூைஜ, சரஸ்வதி பூைஜ, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • இன்று விஜயதசமியை யொட்டி நாமக்கல்லில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    நாமக்கல்:

    ஆயுதபூைஜ, சரஸ்வதி பூைஜ, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இன்று விஜயதசமியை யொட்டி நாமக்கல்லில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில்களில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் பலர் தங்கள் வீடுகளில் சாமி படங்களை வைத்து வழிபட்டனர்.

    சாலைகள் வெறிச்சோடியது

    இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக நாமக்கல்லில் வசிக்கும் வெளியூரை சேர்ந்த பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலே சென்றனர். இதனால் நாமக்கல்லில் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெளிச்சோடி காணப்பட்டன.

    எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட பரமத்தி சாலை, மோகனூர் சாலை, சேலம் சாலை, துறையூர் மற்றும் திருச்சி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒருசில இருசக்கர வாகனங்கள் மட்டுமே சாலையில் சென்றதால் அமைதியான சூழல் நிலவியது.

    • அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விஜயநகர பேரரசு காலத்தில் திரயம்க உடையார் என்பவரால் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது.
    • இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விஜயநகர பேரரசு காலத்தில் திரயம்க உடையார் என்பவரால் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது.

    இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம். கடந்த 51 ஆண்டுகளுக்கு முன்பு 1971-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்பதேர் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மேலும் தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தெப்பத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இந்த ஆண்டு மாரியம்மன் திருவிழா கடந்த 17 -ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. வருகிற 28-ந் தேதி தெப்பக்குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    அதற்கு முந்தைய நாளான 27-ந் தேதி வெள்ளிக்கிழமை தெப்போற்சவ திருவிழா நடத்தப்பட உள்ளது. அதற்கான கள ஆய்வுப் பணிகள் நடந்தது. கடந்த ஆண்டு 90 பேரல்கள் கொண்டு 20 அடிக்கு 20 அடி என அமைக்கப்பட்டிருந்த தெப்பம் இந்த ஆண்டு 150 பேரல்களை 28 அடிக்கு 28 அடியாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2 அடுக்குகளாக இருந்தது. தற்போது 3 அடுக்ககளாக அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்த தெப்பதேர் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் தாசில்தார் சுகந்தி, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன்,கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், நகர் மன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் நகரில் இன்று பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
    • நாமக்கல் பூங்கா சாைல, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, ெகாசவம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூ, பழங்கள் வாங்க அதிகளவில் திரண்டு வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    ஆயுதபூஜை விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் நகரில் இன்று பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

    நாமக்கல்

    நாமக்கல் பூங்கா சாைல, திருச்செங்கோடு ரோடு, துறையூர் ரோடு, ெகாசவம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூ, பழங்கள் வாங்க அதிகளவில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தேவையான பழங்கள், பூ, பொரி மற்றும் சுண்டல், வாழை கன்று ஆகியவற்றை வாங்கி சென்றனர்.

    ஆயுதபூஜையை முன்னிட்டு இன்று வழக்கத்தை விட விற்பனை அதிகரித்த நிலையில் விலையும் உயர்ந்து காணப்பட்டது. நாமக்கல்லில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150 முதல் ரூ.200 வரையும், ஆரஞ்சு ஒரு கிலோ ரூ.100-க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.170-க்கும் விற்பனையானது. ேமலும் கொய்யாபழம் கிலோ ரூ.80-க்கும், திராட்சை கிலோ ரூ.220-க்கும் விற்பனையானது.

    பூக்கள் விலை உயர்வு

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.250- க்கும், அரளி கிலோ ரூ.520- க்கும், ரோஜா கிலோ ரூ.500- முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.500- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் ஏலம் போனது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்செங்கோடு

    இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம், பள்ளி பாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் இன்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.

    • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.
    • விண்ணப்ப படிவத்தில் 7-ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டு களுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில் மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டு காலத்திற்கும் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 1.10.2023 முதல் 31.12.2023 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரார்கள் தகுதியானவர்கள் ஆவர்.

    தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். விண்ணப்ப படிவத்தில் 7-ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவ லரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்த வர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் மட்டும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் “வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல்’’ நிகழ்ச்சி கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் மோகன் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் "வேளாண் விஞ்ஞானி, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல்'' நிகழ்ச்சி கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிர் சாகுபடி முறைகள், பயிர்பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தார். நாமக்கல் வேளாண்மை அலுவலர் மோகன் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    கோவை வேளாண்மை பல்கலைகழகம் சிறப்பு அலுவலர் இயற்கை வள மேம்பாடு (ஓய்வு) இயக்குநர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்னை கன்று தேர்வு முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்கள், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, கரையான் தாக்குதல், தென்னை குரும்பை உதிர்தல், உரமேலாண்மை, மற்றும் மண்ணிலும் தண்ணீரிலும் ஏற்படும் சத்துப்பற்றாக்குறை யினை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு உதவி வேளாண்மை அலுவலர் மாலதி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

    • ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    சிறப்பு அலங்காரம்

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம் பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு கோவிலில் உள்ள ராஜாசாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி, மோகனூர் பாலசுப்பிரமணிய சாமி, கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,-தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற -1 ந் தேதி நடைபெற உள்ளது.
    • இதைெயாட்டி விழாவிற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற -1 ந் தேதி நடைபெற உள்ளது. இதைெயாட்டி விழாவிற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான பகுதிகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் அமைப்பது, பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் இளையராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×