search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு
    X

    60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

    • தெய்வமணி ( 35) . இவர் அந்த பகுதியில் தண்ணீர் இல்லாத 60அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
    • இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தெய்வமணி ( 35) . இவர் அந்த பகுதியில் தண்ணீர் இல்லாத 60அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றுக்குள் தவறி விழுந்த தெய்வமணி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராசிபுரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த தெய்வமணியை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×