search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கேட்டு தெருமுனை பிரசாரம்
    X

    தெருமுனை பிரசாரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஈடுபட்ட காட்சி.

    விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கேட்டு தெருமுனை பிரசாரம்

    • பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையத்தின் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்டத் தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பள்ளிபாளையம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டு 20 சதவீத போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அடுத்தடுத்து நடத்த உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×